Thursday, January 9, 2014

மனைவியுடன் மாவோயிஸ்ட் சரண்


சத்தீஸ்கர் மாநில மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான குட்சா உஷென்டி என்றழைக்கப்படும் ஜி.வி.கே.பிரசாத் அவரது மனைவியுடன் ஆந்திர மாநில போலீஸாரிடம் புதன்கிழமை சரணடைந்தார்.

நக்சல் செயல்களில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வந்த குட்சா உஷென்டி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று போலீஸார் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், குட்சா உஷென்டி அவரது மனைவியுடன் சரணடைந்துள்ளார். மாவோயிஸ்ட்டு சிறப்பு மண்டல குழுவின் செய்தித் தொடர்பாளராகவும், உயர்மட்டக் குழு உறுப்பினராகவும் பிரசாத் இருந்து வந்தாக கூறப்படுகிறது.     

செய்தி : தினமணி 

No comments:

Post a Comment