Thursday, January 9, 2014

16 வயதில் குழந்தை பெற்ற மாணவி,: ஜன்னல் மூலம் வீசிக் கொலை செய்தார்




ஆந்திர பிரதேசத்தில் உள்ள நிஜாமாபாத் மாவட்டத்தில் 16 வயது பள்ளி மாணவி குழந்தை பெற்றார். பின்னர், மாணவி ஜன்னலில் இருந்து குழந்தையை வீசியெறிந்ததில் அது இறந்துவிட்டது.

ஒரு அரசு பெண்கள் உறைவிடப்பள்ளியில் தங்கி படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவி, செய்யாய்கிழமை அதிகாலை குழந்தை பெற்றெடுத்தார். எனினும், பீதியடைந்த அந்த மாணவி, விடுதி கழிவறையின் ஜன்னலில் இருந்து குழந்தையைக் கீழேதூக்கியெறிந்தார். அக்குழந்தையை பள்ளி ஊழியர்கள் கண்டெடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அதுஇறந்துவிட்டது.

'முதல்கட்ட விசாரணையில், அந்த மாணவியின் அத்தைமகனுடன் திருமணம் முடிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு விடுமுறைக்கு பிட்லம் மண்டலில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றிருந்த மாணவி, அத்தை மகனுடன் உறவு கொண்டார். அதனால் அவர் கர்ப்பம் அடைந்தார்' என்று காவல்துறை தெரிவிக்கிறது.

மீண்டும் பள்ளிக்கு வந்த மாணவி, தனது ஆசிரியர்களிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். ஆனால் தனது கர்ப்பத்தை மறைத்துள்ளார். உடல்நலத்தை மருத்துவ ஊழியர்கள் சோதனை செய்வதும் நடைபெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது' என்று மேலும் காவல்துறையினர் கூறுகிறார்கள்.

சிகிச்சைக்காக மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவி மீது, குழந்தை பிறப்பைத் தடுப்பது அல்லது பிறந்த குழந்தையைக் கொல்வது என்ற குற்றத்திற்காக, இந்திய தண்டனைச் சட்டத்தின் 315ஆவது பிரிவின் கீழ் காவல்துறையினர் புகார் ஒன்றைப் பதிவு செய்துள்ளனர். 

மேலும், அவரது அத்தைமகன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரைக் கைதுசெய்வதற்கான முயற்சிகளைக் காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.                                                                                                                                     
வெப்துனியா 

No comments:

Post a Comment