Saturday, January 11, 2014

மணிப்பூரில் பாதுகாப்பு படை-போராளிகள் கடும் துப்பாக்கி சண்டை



மணிப்பூர் மாநிலம் டாமங்லாங் மாவட்டத்தில் உள்ள கெம்ஜி மலைப்பகுதியில் நுழைந்த ஜெலியங்ராங் ஐக்கிய முன்னணி போராளிகள் அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை அசாம் ரைபிள் பிரிவு மற்றும் 9-வது டோக்ரா படைப்பிரிவு போலீசார் அங்கு விரைந்து சுற்றி வளைத்தனர்.

அப்போது போலீசாரை நோக்கி போராளிகள் தாக்கத் தொடங்கினர். பாதுகாப்பு படையினரும் திருப்பி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இரு தரப்பினருக்குமிடையே பல மணி நேரம் கடும் சண்டை நடந்தது. அதிகாலை வரை நடந்த இந்த சண்டையில் உயிரிழப்பு, காயம் பற்றிய தகவல் வெளியாகவில்லை.

அதேசமயம் இதே மாவட்டத்தில் ஈராங் என்ற இடத்தில், மத்திய ரிசர்வ் படை போலீசாரை குறிவைத்து போராளிகள் சக்திவாய்ந்த வெடிகுண்டை வீசி தாக்கியது குறிப்பிடத்தக்கது.                                                                                                      

செய்தி : மாலை மலர் 



No comments:

Post a Comment