ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது.
ஆனந்த்நாக் மாவட்டத்தின் சாம்ஸ்போரா என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் தேடும் பணியில் ஈடுபட்ட போது மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இரு தரப்பினர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது என்று காவல்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் யாரும் காயம் அடைந்தனரா என்பது குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
செய்தி : தினத்தந்தி
No comments:
Post a Comment