Tuesday, April 22, 2014

நடத்தையை உளவுபார்க்க மனைவியின் வயிற்றுக்குள் கண்காணிப்பு கருவி பொருத்திய கணவன்



இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் உள்ள லாகூர் மவட்டத்தில் உள்ள ஹர்பான்ஸ்புரா பகுதியை சேர்ந்தவர் இளம் பெண் லாகூர் மாவட்ட .நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார் அதில் அவர்  கூறியுள்ளதாவது:-

எனக்கும் முகம்மது பயாஸ் என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ஒரு நாள் இரவு மாஜிஸ்திரேட் அக்ரம் ஆசாத் என்பவருடன் குடி போதையில் வந்த என் கணவர் என்னை அந்த மாஜிஸ்திரேட்டுடன் உல்லாசமாக இருக்கும்படி வற்புறுத்தினார்.

இதற்கு நான் மறுத்ததால், என் கணவரின் ஒத்துழைப்புடன் மாஜிஸ்திரேட் என்னை பலவந்தமாக கற்பழித்தார். இச்சம்பவத்துக்குப் பிறகு பல ஆண்களை வீட்டுக்கு அழைத்து வந்த அவர், தன் கண் முன்னால் அவர்களால் நான் கற்பழிக்கப்படுவதை வேடிக்கை பார்ப்பதில் இன்பம் அடைந்தார்.

இப்படி, பலருக்கு என்னை அவர் விருந்தாக்கியதால், வெறுத்துப் போன நான் அவரை விட்டுப் பிரிந்து தாய் வீட்டுக்கு வந்து விட்டேன். ஒரு நாள் சமாதானம் பேசுவதாக சிலருடன் வந்த அவர் என் முகத்தில் ஒருவித நச்சுப் புகையை பாய்ச்சினார். நான் மயங்கி விட்டேன்

கண் விழித்துப் பார்த்தபோது, ஒரு தனியார் மருத்துவமனை கட்டிலில் கிடந்தேன். அடி வயிற்றில் தையல்கள் போடப்பட்டிருந்தது. கடுமையான வலியும், வேதனையும் ஏற்பட்டது. அங்கிருந்த ஒரு டாக்டரின் உதவியுடன் ‘எக்ஸ்-ரே’ எடுத்துப் பார்த்ததில் வாகனங்கள் எங்கிருக்கிறது? என்பதை கண்டுபிடிக்கும் ‘டிராக்கர்’ எனப்படும் கண்காணிப்பு கருவியை என் வயிற்றுக்குள் பொருத்தியுள்ளது தெரிய வந்தது.

நான் எங்கே இருக்கிறேன்? என்ன செய்கிறேன்? என்று கண்காணிப்பதற்காக இத்தகைய கீழ்த்தரமான காரியத்தில் ஈடுபட்ட முகம்மது பயாஸ் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் மேலும் கருவியை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் மனுவை விசாரித்த லாகூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்தி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.

தினத்தந்தி



Sunday, April 6, 2014

வடசென்னை நாடாளுமன்ற வேட்பாளர் உ.வாசுகி - பத்ரி சேஷாத்ரி நேர்முகம்

இன்று மதியம், வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் உ.வாசுகியைச் சந்தித்து சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். இவர் கம்யூனிஸ்ட் தலைவர்கள் உமாநாத் - பாப்பா உமாநாத் ஆகியோரின் மகள். உமாநாத், நான் நாகப்பட்டினத்தில் வசித்தபோது நாகை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்திருக்கிறார். அவர் எழுதியுள்ள சிறு பிரசுரங்கள் சிலவற்றை எனக்குத் தந்தார்.


ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். தேர்தல் பிரசாரங்களில் கண்ட கண்ட விஷயங்களையெல்லாம் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். ஓர் உறுப்பினரால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாக்குறுதி அளிப்பார்கள். உண்மையில், மக்களின் பெரும்பாலான தேவைகளை மாநகராட்சி (அல்லது அந்தந்த உள்ளாட்சி) மற்றும் மாநில அரசுதான் பூர்த்தி செய்யவேண்டியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய சொந்தத் தொகுதி நிதியைக் கொண்டு ஒருசில விஷயங்களைச் செய்யலாம். அவ்வளவுதான்.

வங்கி ஊழியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த வாசுகி, விருப்ப ஓய்வு பெற்றபின் தற்போது முழுநேரக் கட்சிப் பணியாளராக உள்ளார். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். பெண்ணுரிமை, சிறுவர்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார். தன் அனுபவங்களை ‘பெண் - வன்முறையற்ற வாழ்வை நோக்கி...: ஒரு களப்பணியாளரின் அனுபவங்களிலிருந்து’ என்ற சிறு நூலாக எழுதியுள்ளார் (பாரதி புத்தகாலயம்).

வட சென்னை தேர்தல் நிலவரம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். தொழிற்சங்கங்கள் அப்பகுதியில் எம்மாதிரியான பங்காற்றியுள்ளன என்பது குறித்தும் அப்பகுதியின் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்களின் பணி, மாநகராட்சி வார்ட் உறுப்பினர்களின் பணி ஆகியவை குறித்தும் பேசிக்கொண்டிருந்தார். இந்த நல்லுணர்வு வாக்குகளாக மாறவேண்டும்.

வாசுகி போன்றவர்கள் தேர்தலில் ஆதரிக்கப்படவேண்டும். இடதுசாரிப் பொருளாதாரக் கருத்துகள் எனக்கு ஏற்புடையன அல்ல என்றாலும் பொதுவாகவே இடதுசாரி இயக்கங்களின் அர்ப்பணிப்பு உணர்வு, தன்னலம் கருதா உழைப்பு, அப்பழுக்கற்ற வாழ்க்கை முறை ஆகியவைமீது எனக்குப் பெருத்த மரியாதை உண்டு. வட சென்னைவாசிகள் வாசுகிக்கு வாக்களித்து ஆதரவு அளிக்கவேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.