Friday, January 3, 2014

நாளுக்கு நாலு பலாத்கார சம்பவங்கள்: தில்லியில் நடக்கும் கொடூரம்




தில்லி போலீஸார் வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, தலைநகர் தில்லியில் நாளுக்கு நான்கு பாலியல் பலாத்காரக் குற்றங்கள் நடைபெறுகிறதாம்.

கடந்த நான்கு வருடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வந்துள்ளன. தில்லியில் 2013ம் வருடத்தில் 1559 பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய வருடத்தை விட 129.26 சதவீதம் அதிகம்.  2012ல்  680 வழக்குகள் பதிவாயின.

2013ல் பதிவான பலாத்கார வழக்குகளில் 96 சதவீதம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிமுகமான நபர்களாகவே உள்ளனர். 58 வழக்குகளில் மட்டுமே தெரியாத வழிப்போக்கர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 1398 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளதாம்.

2011ல் 572 வழக்குகளும், 2010ல் 585 வழக்குகளும் 2009ல் 459 வழக்குகளும், பதிவாகியுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள்ள் 412.56 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தில்லி போலீஸார் வெளியிட்ட செய்தியில் தெரியவந்துள்ளது.                                                                                                                     

செய்தி : தினமணி 

No comments:

Post a Comment