Saturday, September 27, 2014

பெங்களூர் தனி கோர்ட்டு தீர்ப்பு துளிகள்...



கோர்ட்டு அமைந்துள்ள பரப்பன அக்ரஹாரா பகுதியில் காலை 5 மணி முதல்


அ.தி.மு.க. தொண்டர்கள், பத்திரிகையாளர்கள் குவியத்தொடங்கினர். பத்திரிகையாளர்களை மட்டும் கோர்ட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம்வரை அனுமதித்தனர். அ.தி.மு.க.வினரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்பே நிறுத்திவிட்டனர்.

* தமிழக அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கோர்ட்டு வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். கோர்ட்டு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருடைய வக்கீல்கள் 16 பேர் மட்டும் கோர்ட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

* மதியம் 12 மணி முதல் வழக்கின் தீர்ப்பு வெளிவரத்தொடங்கியதும், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் முகம் வாடத்தொடங்கியது. அங்குள்ள மரத்தடியில் அமர்ந்திருந்து ஒருவருக்கொருவர் சோகமாக பேசிக்கொண்டனர்.

* மதியம் 12.30 மணியளவில் கோர்ட்டு அறையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் சிறிது நேரம் பேசிவிட்டு, மீண்டும் கோர்ட்டுக்குள் சென்றுவிட்டார்.

* பகல் 1 மணியளவில் முதல்&அமைச்சர் ஜெயலலிதாவின் காரில் பொருத்தப்பட்டிருந்த தேசியகொடி அகற்றப்பட்டது.

* மதியம் 2 மணியளவில் கோர்ட்டு அறையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா, தனது காரில் அமர்ந்திருந்து மதிய உணவு சாப்பிட்டார். சசிகலா, சுதாகரன், இளவரசி கோர்ட்டுக்குள் உள்ள அறையில் உட்கார்ந்து சாப்பிட்டனர்.

* 3.30 மணிக்கு தீர்ப்பு வெளியானபோது, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. ஒருசில எம்.எல்.ஏ.க்கள் வாயை பொத்திக்கொண்டு கதறி அழத்தொடங்கிவிட்டனர்.

* முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை போலீசார் தனித்தனியாக ஜெயிலுக்கு அழைத்துச்சென்றனர். அப்போது முதல்-அமைச்சர் நடந்து செல்வதை பார்த்து, பெண் எம்.எல்.ஏ.க்கள் உள்பட அனைவரும் கதறி அழுதனர்.

* ஜெயலலிதாவை ஜெயிலில் அடைத்தபின்பு, இரவு 9 மணி ஆகியும், அ.தி.மு.க.வினர் ஜெயில் வாசலிலேயே நின்றுகொண்டிருந்தனர்.

* ஜெயிலில் அடைக்கப்பட்டவர்களுக்கு மாற்றுத்துணி உள்ளிட்ட தேவையான பொருட்களை சிறை அதிகாரிகள் மூலம் வக்கீல்கள் கொடுத்து அனுப்பினர்.

நன்றி :- தினத்தந்தி

ஊழல் வழக்கில் பதவி இழந்து சிறை சென்ற முதல், முதல்-அமைச்சர்


ஊழல் வழக்கில் பதவி இழந்து சிறை சென்ற முதல், முதல்-அமைச்சர்



ஊழல் செய்து சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனிக் கோர்ட்டு நேற்று 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதன் காரணமாக அவர் முதல்&அமைச்சர் பதவியை இழந்து சிறைக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, முதல்&அமைச்சர் பதவியை இழந்து சிறைக்கு சென்ற முதல் முதல்&அமைச்சர் என்ற பெயர் அவருக்கு கிடைத்துள்ளது.

இதேபோன்று தமிழ்நாட்டில் ஊழல் வழக்கில் பதவி இழந்த 2&வது அரசியல்வாதியாக அவர் திகழ்கிறார்.

சுடுகாட்டு கூரை வழக்கில் டெல்லி மேல்&சபை தி.மு.க. எம்.பி. டி.எம். செல்வகணபதி ஏற்கனவே பதவி இழந்துள்ளார்.

தண்டிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அப்பீல் செய்யும் 6 மாத காலம் பதவியில் தொடர முன்பு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அனுமதி அளித்தது. ஆனால் அந்த சட்டப்பிரிவை சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு ரத்து செய்து விட்டது குறிப்பிடத்தக்கது.


நீதிபதி  ஜான்  மைக்கேல்  டி.குன்கா

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா, கர்நாடக மாநிலம் மங்களூர் கோர்ட்டில் வக்கீலாக பணியைத் தொடங்கியவர், ஆவார். 2002&ம் ஆண்டு நீதிபதிகள் தேர்வில் வெற்றி பெற்று பெல்காம் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து லோக் ஆயுக்தா கோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். 

2009&ல் ஹார்வா மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், பெங்களூர் குடும்ப நல கோர்ட்டு நீதிபதியாக பணி இடம் மாற்றம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து பெங்களூர் புறநகர் மாவட்ட நீதிபதியாக பணியாற்றினார். பின்பு குன்காவை கர்நாடக அரசு, ஊழல் தடுப்புத் துறை பதிவாளராக நியமித்தது.

 அங்கிருந்து 2013&ம் ஆண்டு அக்டோபர் 31&ந் தேதி தமிழக முதல்&அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாடு முழுவதும் சினிமா காட்சிகள் இன்றும் ரத்து ஆகுமா?

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஆங்காங்கே கலவரம் வன்முறைகள் நடைபெற்றது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் சினிமா தியேட்டர்களில் நேற்று மாலை மற்றும் இரவுக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) சினிமா காட்சிகள் தொடர்ந்து ரத்து செய்யப்படுமா? என்பது குறித்து காலை 10 மணிக்கு முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

Friday, September 26, 2014

கணவனை கழுத்தை நெரித்துக்கொன்றுவிட்டு நெஞ்சுவலியில் செத்ததாக நாடகமாடிய மனைவி, கள்ளக்காதலனுடன் கைது

சென்னை பள்ளிக்கரணையில் கணவரைக் கொலை செய்துவிட்டு நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாக நாடகமாடிய மனைவி, கொலைக்கு உதவிய கள்ளக் காதலர் கைது செய்யப்பட்டனர்.


இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: பள்ளிக்கரணை நன்மங்கலம் அருகே உள்ள ஜி.பி.சாமிநகரைச் சேர்ந்தவர் சத்யநாராயணன். இவர் கட்டடத் தொழிலாளி. இந்நிலையில் சத்யநாராயணன் கடந்த 22-ம் தேதி நெஞ்சு வலியால் இறந்துவிட்டதாக அவரது மனைவி அம்சரேகா தெரிவித்தார்.
ஆனால், சத்யநாராயணனின் சாவில் சந்தேகமடைந்த அவரது சகோதரி அஞ்சலை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அதில், அம்சரேகா, தனது கள்ளக்காதலர் கோடம்பாக்கம் காந்திநகர் 10-ஆவது தெருவைச் சேர்ந்த ஆறுமுகத்துடன் (38) சேர்ந்து சத்தியநாராயணனின் கழுத்தை நைலான் கயிறால்இறுக்கிக் கொலை செய்திருப்பது தெரியவந்ததால் ரேகாவையும், ஆறுமுகத்தையும் வியாழக்கிழமை கைது செய்தனர்.
நன்றி :-தினமணி

Saturday, September 20, 2014

2 வயது மகனைக் கொன்று கர்ப்பிணி தாய் தற்கொலை

2 வயது மகனை கொன்று கர்ப்பிணி தாய் தற்கொலை

திருச்சி, செப்.20–திருச்சி வயலூர் ரோடு பாரதிநகர் 11 வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சிவகுருநாதன்.(வயது 31) இவர் காட்டூரில் உள்ள தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி சுதா (28) இவர்களுக்கு 2 வயதில் கவுதம் என்ற மகன் இருந்தார். சுதா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

நேற்று சிவகுருநாதன் காட்டூரில் வேலை முடிந்து சாப்பாட்டிற்காக மதியம் 3 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது சுதாவும், மகன் கவுதமும் வீட்டில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மகன் கவுதம் கழுத்தில் கத்தியால் அறுக்கப்பட்டிருந்தது. சுதா தூக்கில் பிணமாக தொங்கினார். எனவே மகன் கவுதமை கழுத்தை கத்தியால் அறுத்து கொன்று விட்டு சுதா தற்கொலை செய்ததாக கூறப்பட்டது.

இது குறித்து திருச்சி புத்தூர் அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கர்ப்பிணி தாய் சுதா, 2 வயது மகனை கொடூரமாக கொன்று தற்கொலை செய்ய காரணம் என்ன?என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

சுதாவின் கணவர் சிவகுருநாதன்,பெற்றோர் ராஜூ,செண்பகம் மற்றும் உறவினர்களிடம் இன்ஸ்பெக்டர் சீதாராமன் இன்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

சுதாவின் பெற்றோருக்கு சொந்த ஊர் கும்பகோணம் ஆகும். அவரது பெற்றோர் சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர் தோட்டம் பின் புறம் உள்ள ரவி என்பவரது உறவினர் வீட்டில் தங்கி குடும்பம் நடத்தினர்.
அப்போது அங்கு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சிவகுருநாதன் உடன் சுதாவுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தனர். தற்போது திருச்சியில் வாழ்ந்து வந்தனர்.

வயலூர் ரோடு பாரதி நகர் வீட்டிற்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் குடி வந்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை சிவகுருநாதன் கர்ப்பிணியான சுதாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று டாக்டரிடம் காட்டியுள்ளார்.

நேற்று காலை சிவகுருநாதன் வழக்கம் போல் வேலைக்கு சென்ற போது சுதா வாசலில் நின்று டாட்டா காட்டியுள்ளார். மதியம் சிவகுருநாதன் சாப்பாட்டிற்கு வருவதாக கூறி சென்றுள்ளார். மதிய சாப்பாட்டிற்கு வந்த போது தான் சுதாவும்,கவுதமும் பிணமாக கிடந்துள்ளனர்.

இடையில் மாநகராட்சியில் இருந்து மக்கள் தொகை கணக்கு எடுக்க ஆட்கள் வந்து சென்றுள்ளனர். 12.30 மணி வரை சுதாவை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். அதன் பிறகு தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. வசதி குறைவான வாழ்க்கையில் மன அழுத்தத்தில் இருந்த சுதா மகன் கவுதமை கழுத்தை அறுத்துக் கொன்று தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இருப்பினும் காலையில் கணவரை சந்தோஷமாக வழியனுப்பி விட்டு அக்கம் பக்கத்தினரிடம் பேசிக் கொண்டிருந்த சுதா மகனை கொன்று விட்டு தற்கொலை செய்யும் அளவிற்கு தூண்டப்பட்ட காரணம் என்ன?என்பது மர்மமாக உள்ளது.

இது தொடர்பாக போலீசார் கணவர் சிவகுருநாதன், சுதாவின் பெற்றோர் ராஜூ–செண்பகம் மற்றும் அக்கம் பக்கத்து வீட்டினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.வீட்டில் ரத்தக்கறை படிந்த கத்தி மற்றும் தூக்கு கயிறு ஆகியவற்றை கைப்பற்றி உள்ளனர். தடையவியல் துறை போலீசாரும் கை ரேகைகளை ஆய்வு செய்தனர். இன்று சுதா, கவுதமின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. பிரேத பரிசோதனையின் முடிவில் சுதா,கவுதமின் சாவில் மர்மங்கள் விலகும் என்று போலீசார் கூறினர்.

நன்றி : மாலைமலர்

Thursday, September 18, 2014

கறுப்பு பண விவகாரம்: பாராளுமன்ற குழு ஆய்வு





வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்பு பணத்தை மீட்டு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த மே மாதம் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து உள்ளது. இந்த குழு கணக்கில் வராத பணம் தொடர்பாக விசாரணை குழுவுக்கு ஏற்கனவே சில சிபாரிசுகளை வழங்கி இருக்கிறது.


இந்த நிலையில், பாராளுமன்ற நிதிக்குழு கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதற்காக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், கறுப்பு பணத்தை தடுப்பது போன்றவை குறித்து ஆய்வு செய்ய தீர்மானித்து இருக்கிறது. நிதி நிறுவன மோசடிகள் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட இருப்பதால், அது தொடர்பான விவரங்களை அளிக்கக்கோரி நிதி அமைச்சகம், கம்பெனிகள் விவகார அமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி, பங்கு பரிவர்த்தனை அமைப்பு ஆகியவற்றுக்கு ஏற்கனவே நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது.

நன்றி : தினத்தந்தி

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பெண் பலாத்காரம்: காரில் சென்ற போது நண்பர்கள் வெறிச்செயல்


தில்லியில் நண்பர்களுடன் சென்ற பெண் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியில் உள்ள ஒரு காவல்நிலையத்தில் பணியாற்றிவரும் பெண் காவலர் ஒருவரின் மகள்  நேற்று நண்பர்கள் 3 பேருடன் காரில் சென்று இருக்கிறார் அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து அப்பெண்ணுக்கு அவர்கள் கொடுத்துள்ளனர். இதனை குடித்ததும் மயங்கிவிழுந்த அந்த பெண்ணை 3 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் தில்லியில் உள்ள  நேரு மேம்பாலம் அருகே தூக்கி போட்டு சென்று விட்டனர். அவ்வழியாக சென்ற ஆட்டோ டிரைவர் மயக்க நிலையில் இருந்த அந்த பெண்ணை கண்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து  அங்கு வந்த போலீஸார்  அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. மேற்கொண்டு தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணைக்கு பின்னர் 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

நன்றி : தினமணி

Wednesday, September 17, 2014

அஸ்ஸாம் முன்னாள் டிஜிபி துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை

சங்கர் பரூவா

அஸ்ஸாம் மாநில முன்னாள் டிஜிபி சங்கர் பரூவா, துப்பாக்கியால் சுட்டு புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
சாரதா நிதி நிறுவன மோசடியில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு, அஸ்ஸாமில் பாதுகாப்பு அளித்ததாக எழுந்த புகாரில், இவரை சி.பி.ஐ. கண்காணித்து வந்தது.
இதுகுறித்து குவாஹாட்டி நகர மூத்த காவல்துறைக் கண்காணிப்பாளர் ஏ.பி. திவாரி புதன்கிழமை தெரிவித்ததாவது:
துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் உள்ளூர் மருத்துவமனைக்கு பரூவா கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆகையால் இதுகுறித்து மேற்கொண்டு எதுவும் தெரிவிக்க இயலாது. விசாரணை முடிவடைந்த பிறகே, முழுத் தகவலும் தெரிவிக்கப்படும் என்றார் அவர்.
கடந்த வாரம் நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனையில் சங்கர் பரூவா அனுமதிக்கப்பட்டார். நீண்ட சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து புதன்கிழமை காலையில்தான் அவர் வீடு திரும்பியுள்ளார்.
இதுகுறித்து பரூவாவின் உறவினர் ஒருவர் தெரிவிக்கையில், "மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அரை மணி நேரத்துக்குள், மொட்டை மாடிக்கு சென்ற பரூவா, கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். இதையடுத்து உள்ளூர் மருத்துவமனைக்கு அவரை உறவினர்கள் கொண்டு சென்றனர்' என்றார்.
சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு, அஸ்ஸாமில் சங்கர் பரூவா பாதுகாப்பு அளித்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவரது வீட்டில் சி.பி.ஐ. கடந்த மாதம் சோதனை நடத்தியது.
இதனால் மோசடியில் பரூவாவைத் தொடர்புபடுத்தி, ஊடகங்கள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டதால், மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இதுகுறித்து தில்லியில் சி.பி.ஐ. செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பரூவாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் இல்லை. அவருக்கு சம்மனும் அனுப்பவில்லை' என்றார்.
நன்றி : தினமணி

Saturday, September 13, 2014

கல்லூரி மாணவிகள் இருவர் மீது ஆசிட் வீச்சு: மதுரை அருகே பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் பயங்கரம்





மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடந்து சென்ற கல்லூரி மாணவிகள் மீது மர்ம நபர் ஆசிட் வீசியதில் 2 மாணவிகள் காயமடைந்தனர். அவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டம், பேரையூர் அருகேயுள்ள சின்ன பூலாம்பட்டியைச் சேர்ந்த உதயசூரியன் மகள் மீனா (17). இவர், திருமங்கலத்தில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முதலாமாண்டு படித்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த சங்கரபாண்டி மகள் அங்காளஈஸ்வரி (18), அதே கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
மாணவி முகம் கருகியது

தினமும் பேருந்து மூலம் கல்லூரிக்குச் சென்று வரும் இவர்கள், வெள்ளிக்கிழமை வழக்கம்போல வகுப்புகள் முடிந்து பகல் 2 மணியளவில் கல்லூரியிலிருந்து திருமங்கலம் பேருந்து நிலையம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். இவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த மாணவிகள் பிரியா, புவனா, சூரியா உள்ளிட்டோரும் சென்றனர்.

பெருமாள்கோயில் அருகே சென்றபோது குறுகிய தெருவில் இருந்து சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் மாணவிகளுக்கு எதிரே நடந்து வந்தார்.

மாணவிகளை நெருங்கி வந்தபோது அந்த நபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து மாணவிகளை நோக்கி வீசிவிட்டு தப்பியோடி விட்டார். இதில், மீனாவுக்கு முகத்தின் வலதுபுறம், தோள்பட்டை, வயிறு உள்ளிட்ட உறுப்புகள் கருகின. மேலும், ஆசிட் சிதறி தெறித்ததில் அருகில் சென்ற அங்காள ஈஸ்வரிக்கும் தோள்பட்டை, கைகள் வெந்தன.

சந்தேக நபரிடம் விசாரணை

ஆசிட் வீச்சால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் கூச்சலிட்டபடியே அங்கிருந்து பேருந்து நிலையம் நோக்கி ஓடினர். இதைக் கண்ட அப்பகுதி மக்கள், மாணவிகளை தங்களது இரு சக்கர வாகனத்தில் ஏற்றி திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தகவலறிந்து எஸ்பி விஜயேந்திர பிதாரி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.
அப்போது ஆசிட் வீசிய நபர் பிரவுன் கலர் சட்டை மற்றும் பேன்ட் அணிந்திருந்ததாக தெரியவந்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் அதே போல உடையணிந்திருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். ஆனால், அவர் தனக்கும், ஆசிட் வீச்சுக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்தார்.

எனினும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மாவட்ட ஆட்சியர் இல. சுப்பிரமணியன், தென் மண்டல ஐ.ஜி அபய்குமார் சிங், மதுரை சரக டிஐஜி ஆனந்த்குமார் சோமானி, மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூர், துணை ஆணையர் சமந்த் ரோஹன் ராஜேந்திரா உள்ளிட்டோர் மதுரை அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து 2 மாணவிகளையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதுபற்றி ஐஜி அபய்குமார்சிங் கூறும்போது, ‘மாணவிகள் கல்லூரியிலிருந்து திரும்பியபோது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஆசிட் வீசிச் சென்றுள்ளார்.

பகல் நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதால் கண்டிப்பாக ஏதாவது தடயம் கிடைக்கும். இதுபற்றி எஸ்பி சம்பவ இடத்தில் விசாரித்து வருகிறார். 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது’ என்றார்.

சிறப்பு மருத்துவக் குழு…

மாவட்ட ஆட்சியர் இல. சுப்பிர மணியன் கூறும்போது, ‘மாணவி களுக்கு உரிய சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் மாணவிகளைக் கண்காணித்து சிகிச்சை அளிப்பர்’ என்றார்.

கண்களுக்கு பாதிப்பில்லை

அரசு மருத்துவமனை டீன் சாந்தகுமார் கூறும்போது, ‘ஆசிட் வீச்சு காரணமாக மாணவி மீனாவுக்கு 25 முதல் 30 சதவீதம் வரையிலும், மாணவி அங்காள ஈஸ்வரிக்கு 13 முதல் 15 சதவீதம் வரையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இருவருக்கும் கண் பார்வை நன்றாக உள்ளது. காயத்தின் தன்மையைப் பார்க்கும்போது வீரியம் குறைந்த ஆசிட் ஆக இருக்கலாம் எனத் தெரிகிறது்’ என்றார்.

தென் தமிழகத்தில் முதல்முறை

தென் மாவட்டங்களில், முதல் முறையாக மாணவிகள் மீது ஆசிட் வீசியுள்ள சம்பவம் மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாருக்கு வைத்த குறி?

சம்பவத்தை நேரில் பார்த்த மாணவி பிரியா கூறும்போது, ‘தினமும் அரசு பஸ்சில் நாங்கள் ஒன்றாக கல்லூரி வந்து செல்வது வழக்கம். இதுவரை யாரும் எங்களிடம் தகராறு செய்ததில்லை. வெள்ளிக்கிழமை கல்லூரி முடிந்ததும் 5 பேரும் ஒன்றாக நடந்து வந்தோம். மீனாவும், அங்காள ஈஸ்வரியும் எனக்கு முன்னால் சென்றனர். அப்போது எதிரே 35 வயது மதிக்கத்தக்க, பிரவுன் நிற சட்டை அணிந்த ஒருவர் இயல்பாக நடந்து வந்தார். கையில் எதுவுமில்லை. மீனாவுக்கு அருகே வந்ததும் அந்த நபர் திடீரென ஒரு பாட்டிலை எடுத்து அவர்கள் மீது வீசினார். மீனாவும், அங்காள ஈஸ்வரியும் வலியால் அலறியபடி ஓடியதால் நாங்களும் பயத்தில் ஓடிவிட்டோம். அந்த நபர் காலி பாட்டிலை அங்கேயே போட்டுவிட்டு வந்த வழியாக தப்பி ஓடிவிட்டார். அவரை இதற்கு முன் நாங்கள் பார்த்ததே இல்லை. அவர் யாரைக் குறிவைத்து ஆசிட்டை வீசினார் எனத் தெரியவில்லை’என்றார்.

தந்தை இறந்த 22-வது நாளில்..

மீனா மீது ஆசிட் வீசப்பட்டதை அறிந்த அவரது தாய் முருகேஸ்வரி அரசு மருத்துவமனைக்கு ஓடி வந்தார். முகம் கருகிய நிலையில் இருந்த மகளைப் பார்த்ததும் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு முதலுதவி செய்து, வெளியே அழைத்து வந்து அமைதிப்படுத்தினர்.

அப்போது முருகேஸ்வரி, ‘இதயக் கோளாறு காரணமா கணவர் இறந்து 22 நாளுதானே ஆகுது. அந்த துயரம் போவதுக்குள்ள அடுத்து ஒன்னு வந்துருச்சே. அப்பா இறந்தா என்ன, நான் படிச்சு, வேலை செஞ்சு குடும்பத்த காப்பாத்துறேன்னு என் மக சொன்னாளே.. இப்ப அவளையும் இப்பிடி பண்ணிட்டாங்களே..’ என்று கதறி அழுதார். மேலும், ‘எங்களுக்கு எதிரிகள்னு யாருமில்ல. யார் பிரச்சினைக்கும் போக மாட்டோம். இதுக்கு முன்னாடி காலேஜ் போயிட்டு வந்தப்ப, வழியில யாரும் வம்பு இழுத்ததாகூட மீனா சொன்னதில்லை. எதுக்காக இப்பிடி பண்ணினாங்கன்னு தெரியலேயே’என்று கூறினார்.

நன்றி : தி இந்து 

Thursday, September 4, 2014

போலீஸ் 'பூத்'தில் பெண்ணுடன் சிக்கிய எஸ்.ஐ.,க்கு இடமாற்றம்


ஓட்டேரி : ட்டேரியில், போலீஸ், 'பூத்'தில் பெண்ணுடன் நெருக்கமாக இருந்த எஸ்.ஐ.,யை, பகுதிவாசிகள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டேரி காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ., காந்தி, 47. அவர், நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து, பனந்தோப்பு ரயில்வே காலனியில் உள்ள போலீஸ் பூத்தில் கதவை மூடி, அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் இருந்ததாக கூறப்படுகிறது.அதை பார்த்த பகுதிவாசிகள், போலீஸ் பூத்தின் கதவுக்கு பூட்டு போட்டு, புளியந்தோப்பு துணை ஆணையருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, காந்தியை, உடனடியாக பணிமாற்றம் செய்து, துணை கமிஷனர் உத்தரவிட்டார்.



wanRi : தினமலர்

எல்.ஐ.சி. பெண் ஏஜெண்டு கொலை: கொலையாளிகள் பற்றி துப்பு துலக்க 6 தனிப்படை


சென்னை எம்.ஜி.ஆர்.நகர் ஜாபர்கான்பேட்டை கங்காநகரைச் சேர்ந்தவர் விசாலாட்சி (63). எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருந்தார். இவரது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் இங்குள்ள அருள்சோழன் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் தனியாக வசித்து வந்தார்.

இவரது வீடு கடந்த சில நாட்களாக பூட்டி கிடந்தது. விசாலாட்சி வெளியூர் சென்று இருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் நினைத்தனர். இந்த நிலையில் நேற்று இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து வீட்டை திறந்து பார்த்தனர்.

வீட்டின் குளியல் அறையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் விசாலாட்சி பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த தங்க செயின், வைரக்கம்மல், வளையல்கள் கொள்ளை போய் இருந்தது. 240 கிராம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

விசாலாட்சி தங்க நகைக்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. அன்றைய தினம் 2 பேர் விசாலாட்சியுடன் பேசிக்கொண்டு இருந்தனர். அதன் பிறகுதான் இந்த கொலை நடந்து இருக்கிறது.

யாரோ தெரிந்தவர்கள் இந்த கொலையை செய்து நகைகளை கொள்ளையடித்து இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த கொலை குறித்து எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலையாளிகளை பிடிக்க தியாகராயநகர் துணை கமிஷனர் பகலவன் மேற்பார்வையில் அசோக் நகர் உதவி கமிஷனர் தலைமையில் 6 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தெரிந்த நபர்கள் இந்த கொலையை செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் குடியிருப்பு காவலாளிகள், ஏ.சி. மெக்கானிக்கர், பால்காரர்கள் என 15 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 நன்றி :மாலைமலர்

Tuesday, September 2, 2014

ரூ.20 லட்சம் பணத்துக்காக கணவனை சங்கிலியால் கட்டிப்போட்ட மனைவி கைது: உடந்தையாக இருந்த மகன்களும் கைது


ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரை அவருடைய மனைவி மற்றும் மகன்கள் 20 லட்சம் பணம் கேட்டு வீட்டுக்குள் நாய் சங்கிலியால் கட்டி வைத்துள்ளனர்.17 நாட்கள் அவரை மனிதாபிமானமற்ற முறையில் சித்ரவதை செய்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பெங்களூரில் உள்ள ஸ்ரீனிவாசநகரை சேர்ந்த வெங்க டேஷ்(60). கர்நாடக‌ காவல் துறையில் உதவி காவல் ஆய்வாள‌ராக 35 ஆண்டுகள் பணியாற்றிய இவர் கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். வெங்கடேஷூக்கு நாகரத்னா என்ற மனைவியும் சேத்தன், ரஞ்சன் என்ற இரு மகன்களும் உள்ளனர். இவர்களுக்கு ஜே.பி.நகர் அருகே 5 வீடுகள் உள்ளன.

இதன் மூலம் மாதம் ரூ. 50 ஆயிரம் வாடகை வருகிறது. மேலும் கனகபுரா அருகே இருக்கும் 5 ஏக்கர் நிலத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வருமானம் கிடைக்கிறது. எம்.டெக் படித்துள்ள அவரது மூத்த மகன் சேத்தன் ஹெச்.பி. மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். 

மென்பொருள் பொறியியலாளரான இளைய மகன் ரஞ்சன், இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.திருமணம் ஆகாத இருவரும் மாதம் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக சம்பாதிக்கிறார்கள். ஆதலால் வெங்கடேஷ் குடும்பத்தில் பணத்திற்கு பஞ்சமில்லை.

பணத்துக்காகச் சண்டை

வெங்கடேஷ் ஓய்வு பெற்றதில் இருந்து வீட்டில் பணம் தொடர்பான பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடந்த ஜூலை மாத இறுதியில் அவருக்கு ஓய்வுக்கால நிதியாக ரூ.20 லட்சம் கிடைத்தது. இந்தப் பணத்தில் இன்னொரு வீடு வாங்க அவரது மனைவியும் மகன்களும் விரும்பியுள்ளனர். அதற்கு வெங்கடேஷ் மறுத்துள்ளார்.

கடந்த மாதம் 11-ம் தேதி இரவு ரூ.20 லட்சம் பணத்தை வழங்கும்படி வெங்கடேஷிடம் மனைவியும் மகன்களும் கேட்டுள்ளனர். இப்போதைக்கு வீடு தேவையில்லை என வெங்கடேஷ் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி மற்றும் மகன்கள் சேர்ந்து அவரை அடித்துள்ளனர். அதன் பிறகு அவருடைய படுக்கையறையில் நாய் சங்கிலியால் கட்டி வைத்துள்ளனர்.

‘ரூ.20 லட்சம் பணத்தை எங்கள் பேரில் காசோலை எழுதி கொடு. எங்களுக்கு பணம் கிடைத்த உடனே, உன்னை அவிழ்த்து விடுகிறோம்.இல்லையென்றால் சாகும் வரை இதே கதிதான்' என அவரது மூத்த மகன் சேத்தன் கூறியுள்ளார்.சரியான முறையில் உணவும் நீரும் வழங்கவும் மறுத்துள்ளனர். வெங்கடேஷ் பசியால் துடித்து சத்தமிட்டபோது அவரது மனைவி நாகரத்னா உணவு கொடுத்துள்ளார். மேலும் இயற்கை உபாதைகளை கழிக்கவும் விடவில்லை.ஆதலால் அதே இடத்தில் கழித்துள்ளார்.

17 நாட்களுக்கு பிறகு விடுதலை

இந்நிலையில் அவரது தம்பி ராமசந்திரா வெங்கடேஷைத் தேடி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர் காணாமல் போய்விட்டதாக இளையமகன் ரஞ்சன் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் வெங்கடேஷின் அறைக்குள் ராமசந்திராவை நுழைய அனுமதிக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் பெங்களூர் மாநகர கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து கிரிநகர் போலீஸாருக்கு வெங்கடேஷை தேடும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி போலீஸார் வெங்கடேஷின் வீட்டில் சோதனை நடத்தினர்.அப்போது ஒரு அறை பூட்டப்பட்டிருந்தது.அதனை திறந்தபோது துர்நாற்றம் வீசியது.உள்ளே ஒரு கட்டிலில் நாய் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் வெங்கடேஷ் தாடியுடன் இருந்துள்ளார்.

அவரை அங்கிருந்து மீட்ட போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 30-ம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த நாகரத்னா, மூத்த மகன் சேத்தனை போலீஸார் கைது செய்த‌னர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக இருந்த இளையமகன் ரஞ்சன் திங்கள்கிழமை மாலை கைது செய்யப்பட்டார்.

சேர்ந்து வாழ விரும்பவில்லை

சம்பவம் குறித்து வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது,

“பணத்துக்காக சொந்த குடும்பமே என்னை கொல்ல முயற்சித்தது. இனி இவர்களுடன் சேர்ந்து வாழ மாட்டேன். இவர்களுக்காக காலம் முழுக்க கஷ்டப்பட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்து வைத்திருக்கிறேன். ஆனால் என்னை ஒரு கைதியை விட மிக மோசமாக வீட்டுக்குள்ளே சிறை வைத்துவிட்டனர். அவர்கள் மூவருக்கும் சட்டப்படி தக்க தண்டனை வழங்க வேண்டும்''என்றார்.
ரூ.20 லட்சம் பணத்தை எங்கள் பேரில் காசோலை எழுதி கொடு. எங்களுக்கு பணம் கிடைத்த உடனே உன்னை அவிழ்த்து விடுகிறோம்.இல்லையென்றால் சாகும் வரை இதே கதிதான்' என அவரது மூத்த மகன் சேத்தன் கூறியுள்ளார்.சரியான முறையில் உணவும் நீரும் வழங்கவும் மறுத்துள்ளனர்.

நன்றி : தி இந்து

ஹைதராபாத் நட்சத்திர விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை


தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தொழிலதிபருடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை காவல்துறையினரிடம் பிடிபட்டார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் பிரபல நடிகை விபச்சாரத்தில் ஈடுபடுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்படி காவல்துறை ஆணையர் உள்ளிட்ட அதிரடிப்படையினர் அந்த ஹோட்டலில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை காவல் துறையினரிடம் பிடிபட்டார். நடிகைக்கு இடைத்தரகராகச் செயல்பட்ட துணை இயக்குனர் பாலு என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

அந்த நடிகை பல தெலுங்கு படங்களில் நடித்திருப்பதாகவும், கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் நடிகையின் பெயரையோ, தொழிலதிபரின் பெயரையோ வெளியிட காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.

இடைத்தரகராக செயல்பட்ட பாலு சில தெலுங்கு படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். அவர் இந்த ஒப்பந்தத்துக்காக நடிகை சார்பில் ரூ.1 லட்சம் பேரம் பேசியுள்ளார்.

அந்தத் தொகையில் அவருக்கு ரூ.15 ஆயிரத்தை கொடுத்துவிட்டு மீதியை அந்த நடிகை வைத்துக்கொண்டதாக காவல் துறையினரிடம பாலு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அந்த நடிகையை மறுவாழ்வு இல்லத்திற்கு அனுப்பியதாகவும், பாலு விபச்சார தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அதிரடிப்படை காவல் கூடுதல் துணை ஆணையர் தெரிவித்தார்.

 நன்றி : http://tamil.webdunia.com/


Monday, September 1, 2014

பள்ளிக் கழிப்பறையில் தீக்குளித்து மாணவி தற்கொலை


வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே பள்ளிக் கழிப்பறையில் 6-ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேர்ணாம்பட்டு பாகர் உசேன் வீதியைச் சேர்ந்தவர் பெயிண்டர் கண்ணபிரான். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு ஹரிணி (11), ஜனனி என இரு மகள்கள். மஞ்சுளா இறந்து விட்டதால், ஆம்பூரைச் சேர்ந்த சித்ராவை, கண்ணபிரான் 2-ஆவது திருமணம் செய்து கொண்டார். அவர், தற்போது ஆம்பூரில் தாய் வீட்டில் உள்ளார்.
ஹரிணி, அங்குள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். திங்கள்கிழமை காலை, வீட்டிலிருந்து பாட்டிலில் மண்ணெண்ணெய் எடுத்து வந்த ஹரிணி, பள்ளிக் கழிப்பறைக்குள் சென்று தனது உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அவரது அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த மாணவர்கள், ஹரிணி தீக்குளித்த விவரத்தை தலைமையாசிரியை ஆயிஷா பேகத்திடம் கூறினர்.
அவரது தகவலின்பேரில், போலீஸார் வந்து மாணவியை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, சிகிச்சை பலனின்றி மாணவி ஹரிணி இறந்தார். தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.விஜயகுமார், டிஎஸ்பி இ.விஜயகுமார் ஆகியோர் அங்கு வந்து நேரடியாக விசாரணை நடத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக பேர்ணாம்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பள்ளிக் கழிப்பறையில் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி : தினமணி

மனைவியால் 'செக்ஸ்' கொடுமை: மும்பை இளைஞருக்கு விவாகரத்து


மும்பை : மனைவியின், அபரிமிதமான, 'செக்ஸ்' ஆசையை பூர்த்தி செய்ய முடியாமல், களைப்படைந்த கணவன், கோர்ட்டில் விவாகரத்து பெற்ற சம்பவம் நடந்துள்ளது.

மும்பையை சேர்ந்த பெயர், முகவரி குறிப்பிடப்படாத இளைஞர், இந்த ஆண்டு ஜனவரியில், குடும்ப நல கோர்ட்டை அணுகி, மனு ஒன்றை அளித்தார். அதில், குறிப்பிடப்பட்டிருந்ததாவது: எனக்கும், என் மனைவிக்கும், 2012ல் திருமணம் நடந்தது. திருமணம் ஆன பிறகு தான் அவளுக்கு, செக்சில் அதிக ஆர்வம் இருப்பது எனக்கு தெரிய வந்தது. அதிலும், இயற்கைக்கு மாறான செக்சில் அவள் அதிக விருப்பம் கொண்டிருக்கிறாள்.தினமும் மூன்று முறை சேர்ந்த பிறகும் அவளுக்கு திருப்தி கிடைப்பதில்லை. இதனால் என்னை, அசிங்கமாக பேசியும், திட்டியும் வருகிறாள். எனக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தாலும், உடலுறவு வைத்துக் கொள்ள கட்டாயப்படுத்துகிறாள்.அவளின் வேட்கையை என்னால் சரி செய்ய முடியவில்லை.

குடல்வால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு, சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர்கள் என்னை அறிவுறுத்தினர். அந்த நாட்களில் கூட அவள் என்னை விடவில்லை. அவளின் அந்த தொந்தரவால், நான் களைப்படைந்து விட்டேன்.மனநோயாக இருக்கலாம் என கருதி, டாக்டரிடம் செல்லலாம் என அழைத்தால், வர மாட்டேன் என அடம் பிடிக்கிறாள். 'என்னைப் பற்றி யாரிடமாவது சொன்னால், கொன்று விடுவேன்' என, மிரட்டுகிறாள்.நான் செக்சுக்கு மறுத்தால், வேறு யாரிடமாவது சென்று விடுவேன் என மிரட்டுகிறாள். அவளிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.இவ்வாறு அந்த இளைஞர் கோரியிருந்தார். வழக்கு விசாரணைக்கு பல முறை அழைத்து, 'சம்மன்' அனுப்பிய பிறகும், அந்தப் பெண் ஆஜராகாததால், அவளின் கணவனுக்கு அவளிடம் இருந்து விவாகரத்து வழங்கி, குடும்ப நல கோர்ட் நீதிபதி, லட்சுமி ராவ், கடந்த வாரம் உத்தரவிட்டார்.

நன்றி : தினமலர்

பள்ளிக்கு சென்ற ஆசிரியை பட்டபகலில் மர்ம கும்பலால் பாலியல் பலாத்காரம்



உத்தரபிரதேசத்தில் காலை பள்ளிக்கு சென்ற ஆசிரியை மர்ம கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.


தங்க செயின் பறிப்பு



உத்தரபிரதேச மாநிலம் மெயின்பூரி மாவட்டம் நாக்லா மாது என்ற கிராமத்தில் இளம்பெண் ஒருவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளிக்கு ஆசிரியை தினம் நடந்து வந்துள்ளார். இதனை சிலர் நோட்டமிட்டுள்ளனர். எப்போதும் போல் இன்றும் பள்ளிக்கு ஆசிரியை நடந்து வந்துள்ளார். 



அப்போது மர்ம நபர்கள் மூன்று பேரை அவர் வழிமறித்து தங்க செயினை பறித்துள்ளனர். மேலும், ரூ. 5 ஆயிரத்தை பறித்துள்ளனர். அப்போது ஆசிரியை சத்தம் போட்டுள்ளார். செயின் மற்றும் பணத்தை கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து அவர்களுடன் போராடியுள்ளார். அப்போது அந்த குண்டர்கள் ஆசிரியை கடுமையாக தாக்கியுள்ளனர். 



பாலியல் பலாத்காரம்



பின்னர் ஆசிரியை சாலையில் ஓரம் இருந்த புதருக்கு கரகரவென இழுத்துச் சென்றுள்ளனர். அங்கு ஆசிரியையை அந்தக் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. ஆசிரியிடம் இருந்த செயின் மற்றும் பணத்தை அவர்கள் பறித்துக் கொண்டு சென்றுவிட்டனர். அப்போது ஆசிரியையின் சத்தம் கேட்டு அப்பகுதியாக சென்றவர் குற்றவாளி ஒருவனை மடக்கி பிடித்தார். 



மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி சென்ற மற்ற குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட ஆசிரியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளார். என்று போலீசார் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது. என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினாலும், அங்கு தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தினமும் நடத்த வண்ணம் உள்ளது.

நன்றி : தினத்தந்தி