Thursday, January 9, 2014

காஷ்மீர்: மாச்சில் பகுதியில் பனிப்பாறை சரிந்ததில் ராணுவ வீரர் பலி



காஷ்மீரில் பனிப்பாறை சரிந்ததில் ராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளார். காஷ்மீரின் மாச்சில் பகுதியில் பனிச்சரிவு அதிகமாக உள்ளது. இதில் சிக்கி ஒரு ராணுவ வீரர் பலியாகியுள்ளார் என்று பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 காஷ்மீர் மாநிலம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. இதன் காரணமாக பனிச்சரிவு ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. சில பகுதிகளுக்கு பனிச்சரிவு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.                             

செய்தி : தினத்தந்தி

No comments:

Post a Comment