Tuesday, November 24, 2015

யூடியூப் பகிர்வு: பிள்ளைகளிடம் பகிர வேண்டிய 'பகிரங்கங்கள்'! - காணொலி !

விடலைப் பையன்கள் செய்கின்ற பல காரியங்கள் விளையாட்டுத்தனமாகவே பார்க்கப்படுகின்றன. 'சின்னப் பசங்க அப்படித்தான் இருப்பாங்க.. போகப்போக சரியாயிடும்!'என்பதுதான் அவர்களைப் பற்றி உறவுகள், நண்பர்கள், குடும்பங்களுக்கிடையே சொல்லப்படுகிற கருத்தாக இருக்கிறது.

கண நேர மகிழ்ச்சிக்காகவும், தற்பெருமைக்காகவும் ஒரு பெண்ணைக் கிண்டலடிப்பதில் தொடங்குவது, மெல்ல மெல்ல அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. இதனால் இளைஞர்களுக்கும், ஆண்களுக்கும் தாங்கள் என்ன செய்கிறோம்? அதனால் என்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பதே தெரிவதில்லை. பொதுவாகவே வீடுகளில், பாலியல் துன்புறுத்தல் குறித்த பேச்சுகள் அரிதாகத்தான் நிகழ்கின்றன. இந்தச் சுவரைத் தகர்க்க ஒரு முயற்சியை எடுத்திருக்கிறது பிரேக்த்ரூ எனும் மனித உரிமைகள் அமைப்பு.

தனக்கு நேரும் அனுபவங்கள் குறித்து, ஒவ்வொரு தாயும் தனது மகனிடம் சொல்ல வேண்டும் என்கிறது பிரேக்த்ரூ. ஒவ்வொரு பெண்ணும் தன் வீட்டில் சொல்லத் தயங்கும் ஓர் உண்மைச் சம்பவக் காணொலி இதோ.

திருப்புமுனை என்ற பொருள் கொண்ட பிரேக்த்ரூ அமைப்பு, பெண்களும் சிறுமிகளும் சந்திக்கின்ற வன்முறைகளுக்கெதிராக தொடர்ந்து இயங்கி வருகிறது. ஒரு பெண், தன்னுடைய தினசரி வாழ்க்கையில் வெவ்வேறு வடிவங்களில் பாலியல் துன்புறுத்தல்களைச் சந்தித்துக் கொண்டேதான் இருக்கிறாள். சுமார் 90 சதவீத பெண்கள் முக்கியமாகப் பொது இடங்களில் இந்தத் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்கிறது இதன் ஆய்வு.


நன்றி :- தி இந்து

No comments:

Post a Comment