ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ராஜவுரி மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பெண் காவல் அதிகாரியின் மடியில் தலைமைக் காவல் ஒருவர் அமர்ந்திருந்த புகைப்படங்கள் சமூக ஊடங்களில் பரவி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ராஜவுரி மாவட்டத்தில் உள்ள புதால் காவல் நிலையத்தில் பணியாற்றும் சிறப்பு பெண் அதிகாரியின் மடியில் தலைமைக் காவலர் ஜாகிர் உசேன் அமர்ந்திருந்தது போன்ற இரண்டு புகைப்படங்கள் சமூக ஊடங்களில் பரவின. இதையடுத்து அவர்கள் இருவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.
இந்த நிலையில் இதுகுறித்து டி.ஐ.ஜி. ஏ.கே.அத்ரி கூறும் போது, இச்சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது என்றும், இதுதொடர்பாக தங்கள் கவனத்திற்கு தெரிய வந்ததும், தலைமைக் காவலர் ஜாகிர் உசேனை பணியிடை நீக்கம் செய்துவிட்டதாகவும், தெரிவித்துள்ளார்.
அதேபோல் பெண் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற வெட்கத்துக்குரிய செயலை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்
தினமணி
No comments:
Post a Comment