தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தொழிலதிபருடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை காவல்துறையினரிடம் பிடிபட்டார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் பிரபல நடிகை விபச்சாரத்தில் ஈடுபடுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்படி காவல்துறை ஆணையர் உள்ளிட்ட அதிரடிப்படையினர் அந்த ஹோட்டலில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை காவல் துறையினரிடம் பிடிபட்டார். நடிகைக்கு இடைத்தரகராகச் செயல்பட்ட துணை இயக்குனர் பாலு என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அந்த நடிகை பல தெலுங்கு படங்களில் நடித்திருப்பதாகவும், கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் நடிகையின் பெயரையோ, தொழிலதிபரின் பெயரையோ வெளியிட காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.
இடைத்தரகராக செயல்பட்ட பாலு சில தெலுங்கு படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். அவர் இந்த ஒப்பந்தத்துக்காக நடிகை சார்பில் ரூ.1 லட்சம் பேரம் பேசியுள்ளார்.
அந்தத் தொகையில் அவருக்கு ரூ.15 ஆயிரத்தை கொடுத்துவிட்டு மீதியை அந்த நடிகை வைத்துக்கொண்டதாக காவல் துறையினரிடம பாலு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அந்த நடிகையை மறுவாழ்வு இல்லத்திற்கு அனுப்பியதாகவும், பாலு விபச்சார தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அதிரடிப்படை காவல் கூடுதல் துணை ஆணையர் தெரிவித்தார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் பிரபல நடிகை விபச்சாரத்தில் ஈடுபடுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்படி காவல்துறை ஆணையர் உள்ளிட்ட அதிரடிப்படையினர் அந்த ஹோட்டலில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை காவல் துறையினரிடம் பிடிபட்டார். நடிகைக்கு இடைத்தரகராகச் செயல்பட்ட துணை இயக்குனர் பாலு என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அந்த நடிகை பல தெலுங்கு படங்களில் நடித்திருப்பதாகவும், கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் நடிகையின் பெயரையோ, தொழிலதிபரின் பெயரையோ வெளியிட காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.
இடைத்தரகராக செயல்பட்ட பாலு சில தெலுங்கு படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். அவர் இந்த ஒப்பந்தத்துக்காக நடிகை சார்பில் ரூ.1 லட்சம் பேரம் பேசியுள்ளார்.
அந்தத் தொகையில் அவருக்கு ரூ.15 ஆயிரத்தை கொடுத்துவிட்டு மீதியை அந்த நடிகை வைத்துக்கொண்டதாக காவல் துறையினரிடம பாலு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அந்த நடிகையை மறுவாழ்வு இல்லத்திற்கு அனுப்பியதாகவும், பாலு விபச்சார தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அதிரடிப்படை காவல் கூடுதல் துணை ஆணையர் தெரிவித்தார்.
நன்றி : http://tamil.webdunia.com/
No comments:
Post a Comment