Thursday, September 18, 2014

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பெண் பலாத்காரம்: காரில் சென்ற போது நண்பர்கள் வெறிச்செயல்


தில்லியில் நண்பர்களுடன் சென்ற பெண் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியில் உள்ள ஒரு காவல்நிலையத்தில் பணியாற்றிவரும் பெண் காவலர் ஒருவரின் மகள்  நேற்று நண்பர்கள் 3 பேருடன் காரில் சென்று இருக்கிறார் அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து அப்பெண்ணுக்கு அவர்கள் கொடுத்துள்ளனர். இதனை குடித்ததும் மயங்கிவிழுந்த அந்த பெண்ணை 3 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் தில்லியில் உள்ள  நேரு மேம்பாலம் அருகே தூக்கி போட்டு சென்று விட்டனர். அவ்வழியாக சென்ற ஆட்டோ டிரைவர் மயக்க நிலையில் இருந்த அந்த பெண்ணை கண்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து  அங்கு வந்த போலீஸார்  அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. மேற்கொண்டு தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணைக்கு பின்னர் 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

நன்றி : தினமணி

No comments:

Post a Comment