Monday, December 9, 2013

சென்னை: : கணவரைத் தீ வைத்து எரித்துக்கொன்ற மனைவி புழல் ஜெயிலில் அடைப்பு

புளியந் தோப்பு கண்ணிகாபுரம் ஜோசப் தெருவைச் சேர்ந்தவர் பாரத் (28). பெரிய மேட்டில் உள்ள தோல் மண்டியில் வேலை பார்த்து வந்தார்.

இவரது மனைவி பவானி (26). இருவரும் 9 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். நிலா (8), சஞ்சய் (5) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

பாரத்துக்கு குடிப்பழக்கம் உண்டு. அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியை சித்ரவதை செய்து வந்தார். இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதே போல நேற்று முன் தினம் கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பாரத் வீட்டில் கேனில் இருந்த மண்எண்ணையை எடுத்து மனைவி பவானி மீது ஊற்ற முயன்றார். ஆனால் மண் எண்ணை பாரத் உடலிலேயே பட்டது. பயந்து போன பவானி வீட்டில் இருந்த தீப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினார். ஆனால் பாரத் மனைவியை பிடிக்க முயன்றார். அவனது பிடியில் இருந்து தப்ப பவானி தீக்குச்சியை உரசி கணவர் மீது போட்டு விட்டு ஓடி விட்டார்.

ஏற்கனவே மண்எண்ணையில் நனைந்து இருந்த பாரத் மீது தீக்குச்சி விழுந்து உடல் பற்றி எரிந்தது. வலியால் துடித்தார். பின்னர் தீயை தானே அணைத்து பெரியமேட்டில் குடியிருக்கும் தனது தந்தை வீட்டுக்கு நடந்தே சென்றார்.

அவர்கள் ஒரு ஆட்டோவில் ஏற்றி பாரத்தை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி பாரத் நேற்று பரிதாபமாக இறந்தார். விசாரணையில் அவரை மனைவியே தீ வைத்தது தெரிய வந்தது.

இதையொட்டி பவானியை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.                   

மாலைமலர்

No comments:

Post a Comment