Wednesday, December 11, 2013

சென்னை : நடப்பாண்டில் குண்டர் சட்டத்தில் 1800 பேர் கைது


சென்னையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடப்பாண்டு இதுவரை 1800 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகரக்  காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை பெருநகரக்  காவல்துறை கடந்த ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 904 பேரைக்  கைது செய்தது. இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

2002ம் ஆண்டு 1143 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதே, அதிக எண்ணிக்கையாக கூறப்பட்டது. ஆனால் இந்தாண்டு அதையும் தாண்டி 1,800 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு சென்னையில் 632 தங்கச் சங்கிலி பறிப்புச் சம்பவங்கள் நடைபெற்றன. இந்தாண்டு இதுவரை 511 தங்கச் சங்கிலி பறிப்புச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. வழிப்பறிச் சம்பவங்கள் கடந்த ஆண்டு 85 நடந்தன. இந்த ஆண்டு 71 சம்பவங்கள் நடந்துள்ளன.

ஆதாயக் கொலைகள் கடந்த ஆண்டு 17 நடந்தன. இந்த ஆண்டு அதன் எண்ணிக்கை 11 ஆக குறைந்துள்ளது. அதேவேளையில் திருட்டு வழக்குகளில் கடந்த ஆண்டு ரூ. 16 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டன. இந்த ஆண்டு ரூ. 20 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு குற்ற வழக்குகளில் 91 சதவீத குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த ஆண்டு போலீசாரின் தீவிர நடவடிக்கைகளால் 93 சதவீத குற்றவாளிகள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பெருநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி, 11-12-2013

No comments:

Post a Comment