Sunday, December 1, 2013

ஓடும் ரயிலில் ௩ ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை

ஓடும் ரயிலில் 3 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை



பிகாரில் ஓடும் ரயிலில் 3 ராணுவ வீரர்களை மாவோயிஸ்டுகள் சனிக்கிழமை சுட்டுக் கொன்றனர். மேலும் அவர்களிடம் இருந்த 5 துப்பாக்கிகளை பறித்துச் சென்றனர்.

பிகார் மாநிலம் ஆஷிக்பூர்-ஜமால்பூர் இடையே சாகேப்கஞ்ச்-பாட்னா இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் சனிக்கிழமை ஜமால்பூரில் இருந்து புறப்பட்டது. அதில் ஏராளமான பயணிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பயணம் செய்தனர்.

இந்நிலையில், அந்த ரயில் பிகார் மாநிலம் ஆஷிக்பூர்-ஜமால்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள சுரங்கப் பாதையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அங்கு கும்பலாக வந்த மாவோயிஸ்டுகள் ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் ராணுவ வீரர்களான அசோக்குமார், போலா தாக்குர், உதய் சிங் ஆகிய 3 பேர் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். முகமது இம்தியாஸ், வினய்குமார் ஆகிய இருவர் காயமடைந்தனர்.

பின்னர் அவர்கள் வைத்திருந்த 5 துப்பாக்கிகளை மாவோயிஸ்டுகள் பறித்துச் சென்றனர்.

இது பற்றி ஜமால்பூர் ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் அமிதாப் குமார் தாஸ் கூறுகையில், ""மாவோயிஸ்டுகளின் தாக்குதலுக்குள்ளான ராணுவ போலீஸார் பாகல்பூரில் உள்ள 12-வது யூனிட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ரயில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது'' என்றார்.                                                       

தினமணி ,  01-12 - 2013                                       


No comments:

Post a Comment