Wednesday, December 4, 2013

கேரள ரிசார்ட்டில் ஐ.டி. பெண் ஊழியர் கற்பழிப்பு: வெளி மாநில வாலிபர்கள் 2 பேர் கைது




திருவனந்தபுரம், டிச. 4–

குமரி மாவட்ட எல்லையையொட்டி உள்ள கேரள பகுதியில் பூவாறு என்ற இடத்தில் கடலும், காயலும் கலக்கிறது. இது இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக இருப்பதால் இங்கு கேரள சுற்றுலாத்துறை பயணிகளை கவர உல்லாச படகு சவாரி, ஆயுர்வேத ஆயில் மசாஜ் போன்றவற்றை ஏற்படுத்தியது.

இது வெளிமாநில சுற்றுலா பயணிகளை கவர்ந்ததால் ஏராளமானோர் இங்கு வரத் தொடங்கினர். இதையடுத்து இந்த பகுதியில் ரிசார்ட்டுக்கள், உல்லாச விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள் வந்தன. கடந்த வாரம் இங்குள்ள ஒரு ரிசார்ட்டுக்கு பெங்களூரில் இருந்து தனியார் ஐ.டி. நிறுவன ஊழியர்கள் சுற்றுலா வந்தனர்.

இவர்களில் 41 வயது பெண் ஒருவர் ரிசார்ட்டில் தனியாக அறை எடுத்து தங்கி இருந்தார். அவரை இரவு நேரத்தில் மர்மநபர்கள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுபற்றி அந்த பெண் பூவாறு போலீசில் புகார் செய்தார்.

சுற்றுலா வந்த பெண் கற்பழிக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கேரள மாநில மகளிர் கமிஷன் தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான ரோசக்குட்டி தலைமையிலான உறுப்பினர்கள் சம்பவம் நடந்த ரிசார்ட்டிற்கு நேரில் சென்று விசாரித்தனர்.

பின்னர் அவர்கள் கூறும் போது, இங்குள்ள ரிசார்ட்டில் தங்குபவர்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்றும், இதை மாநில அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறினர்.

இதற்கிடையே பெண் ஊழியர் கற்பழிப்பு தொடர்பாக தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், பெண் கற்பழிக்கப்பட்ட ரிசார்ட்டில் பணிபுரியும் 2 அசாம் மாநில வாலிபர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

உடனே போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர். இதில் இருவரும் அந்த பெண்ணை கற்பழித்தது தெரிய வந்தது. இதையடுத்து அசாமை சேர்ந்த லாகின்நாத் (வயது 20), பெர்ஸ்சோனாபாம் (22) ஆகிய இருவரை கைது செய்தனர்.

அவர்கள் போலீசாரிடம் கூறியதாவது:–

ரிசார்ட்டில் பணிபுரிந்து வந்தபோது, அங்கு பெங்களூர் பெண் ஊழியர் தனியாக தங்கியிருப்பதை அறிந்தோம். அவரை இரவில் தனியாக சந்திக்க விரும்பினோம். இதற்காக அந்த பெண் தனது தோழிகளுடன் வெளியே செல்லும் முன்பு அறைக்குள் நுழைந்து அங்குள்ள ஜன்னல் கதவின் தாழ்பாளை திறந்து வைத்தோம். இரவில் அவர் தூங்க வந்தபோது, ஜன்னல் வழியாக அறைக்குள் நுழைந்தோம்.

அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, அவர் சத்தம் போட்டார். நாங்கள் அவரது வாயை பொத்தி பாலியல் பலாத்காரம் செய்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அவர்கள் இதுபோல வேறு பெண்களிடம் கைவரிசை காட்டினார்களா? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மாலைமலர் 04-12-2013

No comments:

Post a Comment