Sunday, December 22, 2013

பாலியல் புகார் : டிவி செய்தி ஆசிரியர் கைது


:பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளித்த புகாரின் பேரில் கேப்டன்  தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் தினேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர்.
.
ஓட்டேரியை சேர்ந்தவர் மோகனா (வயது 30) இவர் கேப்டன் தொலைக்காட்சியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் நேற்று மாலை மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில்,  நான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன்.  இதில், செய்தி ஆசிரியராக உள்ள தினேஷ் குமார்  பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார். இது தொடர்பாக நிறுவனத்திடம் ஏற்கனவே புகார் அளித்தேன். ஆனால், இன்றுவரை அவர் மீது  நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும், தினேஷ் குமார் நீ யாரிடம் புகார் அளித்தாலும், என்னை யாராலும் ஒன்று செய்துவிட முடியாது எனக்கூறி தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார்.  இதனால்,  மனரீதியாகப் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன்.
 
எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த புகார் தொடர்பாக மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ஆனந்த பாபு பெண் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.இந்நிலையில், இது தொடர்பாக, செய்தி ஆசிரியர் தினேஷ் குமாரை போலீசார் கைது செய்தனர்.
| |
செய்தி : மாலைச் சுடர்
   

No comments:

Post a Comment