Friday, March 14, 2014

18 தொகுதிகளில் போட்டியிட இடதுசாரிகள் முடிவு


வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சிகள் இணந்து தலா 9 தொகுதிகள் வீதம்  மொத்தம் 18 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜி.என். ராமகிருஷ்ணன் ஆகியோர் இதனைத் தெரிவித்தனர். 

புதுச்சேரி, கடலூர், தூத்துக்குடி, தருமபுரி, திருவள்ளூர், தென்காசி, நாகை, தூத்துக்குடி, கடலூர், திருப்பூர் ஆகிய தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை, மதுரை, கன்னியாகுமரி, வடசென்னை, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், விழுப்புரம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது.

தினமணி

No comments:

Post a Comment