Wednesday, February 26, 2014

5 வீரர்களைக் கொன்றபின் தற்கொலையும் செய்துகொண்ட இராணுவ வீரர்

காஷ்மீர் மாநிலம் கந்தெர்பால் மாவட்டத்தில் அமைந்துள்ள ராணுவ முகாமில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர், நள்ளிரவு 2 மணியளவில், முகாமுக்குள் உறங்கிக் கொண்டிருந்த வீரர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் பலியாகினர். துப்பாக்கிச் சூடு நடத்திய வீரரும், தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மிக மோசமான சூழ்நிலையில் பணி, மன அழுத்தம், குடும்பத்தை விட்டு வெகு நாட்கள் பிரிந்திருப்பதால் ஏற்படும் மன பாதிப்பு, அடிப்படை வசதிகள் இன்மை, மோசமான தலைமை, அதிகக் கட்டுப்பாடுகள் போன்றவை, இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், இந்த துப்பாக்கிச் சூடு ஏன் நடத்தப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது  

தினமணி

No comments:

Post a Comment