"பத்மவிபூஷன்' விருது பெற்றுள்ள, 101 வயதாகும், பாலிவுட் நடிகை, ஜோரா சேகல், தனக்கு சொந்த வீடு தருமாறு, டில்லி, மாநில அரசையும், மத்திய அரசையும், பல ஆண்டுகளாக கேட்டும், இது வரை அவருக்கு, வீடு கிடைக்கவில்லை. நடிகை ஜோரா சேகல், 1935ல், நடிக்கத் துவங்கினார்.
பல படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ள இவர், சில ஆண்டுகளுக்கு முன் வரை, நடித்து வந்தும், சொந்த வீடு இல்லாமல், டில்லியில், தன் மகள் வசிக்கும், அடுக்கு மாடி குடியிருப்பில், பத்தாவது மாடியில் வசித்து வருகிறார். கடந்த, 2010ல், பத்மவிபூஷன் விருது பெற்ற இவர், தனக்கு சொந்தமாக, கீழ்தளத்தில் வீடு ஒதுக்கி தருமாறு, டில்லியின் முந்தைய, காங்கிரஸ் முதல்வர், ஷீலா தீட்சித்திடம், பலமுறை மனு கொடுத்தும், இது வரை வீடு கிடைக்கவில்லை.
இதனால், ஜோரா சேகலின் மகள், கிரண் சேகல், தற்போதைய முதல்வர், "ஆம் ஆத்மி' கட்சியை சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவாலிடம் மனு கொடுத்துள்ளார். விரைவில் தன் தாய்க்கு, வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக, அவர் கூறியுள்ளார்.
தினமலர்
No comments:
Post a Comment