Sunday, November 2, 2014

தரமணியில் புதுமணப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை ஆர்.டி.ஓ. விசாரணை


ஆலந்தூர்,

தரமணியில் புதுமணப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.


புதுமணப்பெண்

சென்னை தரமணி தந்தை பெரியார் நகர், கலைஞர் 1–வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் பிரேம்(வயது 27). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், பிரியா(22) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரியாவின் தங்கை திருமணம் நடைபெற்றது. ஆனால் இந்த திருமணத்துக்கு பிரேம் செல்லவில்லை என்று தெரிகிறது. இதனால் கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் மனம் உடைந்த பிரியா, வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் தரமணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி விசாரித்து வருகின்றனர்.

பிரியாவுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

நன்றி :- தினத்தந்தி

No comments:

Post a Comment