Saturday, June 28, 2014

‘இடி விழுந்ததே விபத்துக்குக் காரணம்’ - விபத்து குறித்து கட்டுமான நிறுவனம் பதில்


11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததற்குக் காரணம், இடி விழுந்ததுதான் என கட்டுமான நிறுவனம் ‘பிரைம் சிருஷ்டி’யின் இயக்குனர் பாலகுரு கூறுகிறார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘11 மாடி கட்டிடம் முறையான அனுமதி பெற்றே கட்டப்பட்டு வந்தது. எந்த விதி மீறலும் கிடையாது. இடி விழுந்ததுதான் கட்டிடம் இடிந்து விழுந்ததற்குக் காரணம். எனவே கட்டிடம் இடிந்து விழுந்ததற்குப் பொறுப்பு ஏற்க முடியாது’’ என கூறினார்.

மேலும், ‘‘கட்டிடத்தின் கட்டுமானப் பணி முடிந்தபிறகுதான் வழக்கமாக இடிதாங்கும் கருவி பொருத்தப்படுவது வழக்கம். கட்டிடம் இப்போதுதான் நிறைவுக் கட்டத்தை எட்டி வந்தது. விபத்தின்போது 50 பேர் கட்டிடத்தில் இருந்தனர். சம்பவத்தின்போது பலத்த மழை பெய்தது’’ என்றும் தெரிவித்தார்.

தினத்தந்தி



No comments:

Post a Comment