Saturday, June 7, 2014

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த சுங்கத்துறை அதிகாரிக்கு சிறைத் தண்டனை



சென்னையில் சுங்கத்துறை கண்காணிப்பாளராக இருந்த புகழேந்தி (50) வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2004 - 2009ஆம் ஆண்டு வரை பணியில் இருந்த புகழேந்தி, வருமானத்துக்கு அதிகமாக ரூ.89.72 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்தது ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரமராஜ் உத்தரவிட்டார்.

தினமணி

No comments:

Post a Comment