Sunday, June 22, 2014

திருக்கோஷ்டியூர் கோயிலில் கலசங்கள் திருட்டு


திருக்கோஷ்டியூரில் கலசங்கள் 
திருடு போன முத்தையா கோயில். 
 
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகேயுள்ள திருக்கோஷ்டியூர் முத்தையா கோயிலில் கோபுர கலசங்கள் திருடப்பட்டுள்ளன.

திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள முத்தையா கோயில் அர்ச்சகர் சனிக்கிழமை காலை வழக்கம்போல கோயிலைத் திறந்துள்ளார். அப்போது கோயிலில் 13 கோபுர கலசங்கள் திருடுபோயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுதொடர்பாக கோயில் அர்ச்சகர் திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்துக்கும், திருப்பத்தூர் அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தார். இதையடுத்து, அறநிலையத் துறை திருப்பத்தூர் பகுதி ஆய்வாளர் மாலா கோயிலைப் பார்வையிட்டு, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில், போலீஸார் கோயிலின் சுற்றுப்புறப் பகுதிகளைச் சோதனையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சோதனை நடைபெற்றது. ஓரடி உயரமுள்ள 3 கலசங்களும், அரையடி உயரமுள்ள 10 கலசங்களும் திருடு போய் உள்ளது தெரியவந்துள்ளது.

இக் கலச திருட்டு தொடர்பாக திருக்கோஷ்டியூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி

No comments:

Post a Comment