Wednesday, June 25, 2014

அடையாறு ஆற்றில் குதித்து தொழிலதிபர் தற்கொலை


சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அடையாறு பாலம் அருகே புதன்கிழமை காலை ஒரு கார் நின்றது. அந்த காரில் வந்திறங்கிய 82 வயது மதிக்கதக்க முதியவர் அடையாறு பாலற்றின் மீது நடந்து வந்தார். அப்போது திடீரென பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றுக்குள் அவர் குதித்தார்.இதைப் பார்த்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து அந்த முதியவரை தேடினர்.

சிறிது நேரத்துக்கு பின்னர் அந்த முதியவர், அங்கிருந்து சடலமாக மீட்கப்பட்டார். மேலும் இது குறித்து அபிராமபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.விசாரணையில் அந்த முதியவர் கந்தன்சாவடியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (82) என்பது தெரியவந்தது. அங்கு எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் விற்கும் கடை வைத்து நடத்தி வரும் அவர், குடும்ப பிரச்னையின் காரணமாக அடையாறு ஆற்றில் இருந்து குதித்து தற்கொலை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி

No comments:

Post a Comment