Sunday, August 31, 2014

காதலித்த மகளுக்கு சூடு போட்ட டி.எஸ்.பி. மீது வழக்கு


சென்னை இராயப்பேட்டையில் மகளுக்குச் சூடு வைத்துக் கொடுமைப்படுத்தியதாக இரயில்வே காவல் துணைக்கண்காணிப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
இராயப்பேட்டையைச் சேர்ந்தவர்  தனவேல் இவர் தமிழக இரயில்வே காவல்துறையில் திருச்சி துணைக் காவல் கண்காணிப்பாளராக உள்ளார். தனவேலின் 24 வயது மகள் கடந்த 28-ம் தேதி இராயப்பேட்டை மருத்துவமனையில் கை,கால்,தலை,இடுப்பு ஆகியப் பகுதிகளில் ரத்தக் காயங்களுடனும், தீ காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரிடம் போலீஸார் விசாரணை செய்ததில், தான் காதலிப்பதாகவும், இந்தக் காதல் தனது தந்தைக்குப் பிடிக்காததால் கிரிக்கெட் மட்டையால் தாக்கி, இரும்புக் கம்பியால் உடலில் சூடு வைத்ததாகவும் அவர் தெரிவித்தாராம். மேலும், இதுகுறித்து அவர், இராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் இராயப்பேட்டை போலீஸார், மகளைக் கொடுமைப்படுத்தியதாக தனவேல் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். தனவேலின் மகள் ஒரு தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வருவது குறிப்பிடதக்கது.
நன்றி : தினமணி

No comments:

Post a Comment