Sunday, August 31, 2014

பணம், வீடு கேட்டு கணவருக்கு கொலை மிரட்டல்: மனைவி மீது வழக்கு


கணவரிடம் ரூ.25 லட்சம் பணம், வீட்டை தன் பெயருக்கு எழுதி வைக்கக் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக மனைவி மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டை தலைவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் ஸ்ரீராம்(28). இவர் புணேயில்தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றுகிறார். இவருக்கும் மகாராஜபுரத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் மகள் லோகா (27)வுக்கும் கடந்த 14.2.2013 அன்று பெற்றோர் ஏற்பாட்டில் திருமணம் நடைபெற்றதாம். இருவரும் புணேயில் 3 மாதங்கள் சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.
இதற்கிடையே லோகா, கணவரிடம் சண்டை போட்டு ரூ.25 லட்சம் பணம் அவரது பெயரில் சொந்த ஊரில் உள்ள பூர்வீக வீட்டை தனது பெயரில் மாற்றித் தந்தால் தான் சேர்ந்து வாழ முடியும் எனக் கூறி தந்தை வீட்டுக்கு வந்து விட்டாராம்.
கடந்த 4.4.2014 அன்று லோகா ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், தனது கணவர் வீட்டார் தான் திருமணத்தின் போது போட்டு வந்த நகையில் 40 பவுனை அடகு வைத்து தனக்கு சாப்பாடு போடாமல் கொடுமைப்படுத்தியதாக தெரிவித்திருந்தார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் லோகாவுக்கும் மற்றொருவருக்கும் 7.12.2007இல் திருமணம் நடைபெற்றுள்ளதாகவும், இத் திருமணம் சென்னை சென்ட்ரல் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவாகியுள்ளதாகவும் அஸ்வின்ஸ்ரீராம் தெரிந்துள்ளார். இதையடுத்து அஸ்வின்ஸ்ரீராம் குடும்பத்தினர், லோகா குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்த அழைத்துள்ளனர்.
இரு தரப்பினரும் ஞாயிற்றுக்கிழமை ராஜபாளையத்தில் பேச்சுவார்தை நடத்தினராம். அப்போது லோகா மற்றும் அவரது உறவினர்கள் அஸ்வின்ஸ்ரீராம் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் ரூ.25 லட்சம் பணம், அவரது பெயரில் உள்ள சொந்த வீட்டை லோகா பெயருக்கு மாற்றித் தராவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்களாம். இதையடுத்து அஸ்வின் ஸ்ரீராம் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி, லோகா மற்றும் அவரது தாயார் சீதாலட்சுமி, தாத்தா ஜெயக்குமார், அக்காள் கெüசிகா மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
 நன்றி : தினமணி

No comments:

Post a Comment