சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் புதன்கிழமையன்று காலை நடத்திய திடீர் தாக்குதலில், மத்திய ரிசர்வ் படை போலீசார் 4 பேர் பலியானார்கள். 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிஜப்பூர் மாவட்டம் முர்கினர் மற்றும் சேராமுங்கி இடையிலான காட்டுப் பகுதியில், மோடக்பல் என்னுமிடத்தில், அவர்கள் சென்று கொண்டிருந்தபோது நக்சல்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதுபற்றிய தகவலின் பேரில், கூடுதல் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நக்சல்களுக்கு எதிரான தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
நன்றி :- தினமணி , 28 - 11 -2013

No comments:
Post a Comment