Saturday, November 30, 2013

மன்னவன் ஆணைக்கு மாற்று இல்லை - பழமொழி ( 311 ) இனிப்பு வழங்கிக் கொண்டாடும் பக்தர்கள்.



சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக புதுவை நீதிமன்றத்தில் புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டதால் பரபரப்பாக காணப்பட்டது.

புதுச்சேரி நீதிமன்றத்தில் காலை 10 மணிக்கு நீதிபதி முருகன் வந்தார். முதலில் வேறு சில வழக்குகளை விசாரித்த அவர் 10.35 மணிக்கு சங்கரராமன் கொலை வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட 23 பேரில் 21 பேர் மட்டுமே ஆஜராகி இருந்தனர். இதில் தில்பாண்டியன் கொலை வழக்கு ஒன்றில் தலைமறைவாகி விட்டதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. சில்வஸ்டர் ஸ்டாலின் பஸ்சில் வந்து கொண்டிருக்கிறார் என அவரது வழக்குரைஞர் கூறியதால் நீதிபதி முருகன் தீர்ப்பை சிறிது நேரம் ஒத்தி வைத்தார். பின்னர் 10.50 மணிக்கு மீண்டும் நீதிபதி வந்து அமர்ந்தவுடன் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஆஜராயினர்.

நீதிமன்ற வளாகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் ஏராளமானோர் குழுமி இருந்தனர்.

பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான சாதனங்களை கொண்டு வந்திருந்தன. தீர்ப்பு முடிந்து ஜயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்டோர் வெளிவந்தவுடன், அவர்களிடம் பேட்டி எடுப்பதற்காக செய்தியாளர்கள் அனைவரும் முண்டியடித்துச் சென்றனர். ஆனால் சுவாமிகள் இருவரும் எதுவும் கூறாமல் தங்கள் வாகனங்களில் ஏறிச் சென்றுவிட்டனர்.

சுவாமிகள் திருப்பதி செல்ல உள்ளார் . முன்னதாக திருச்ஸெந்தூர் செல்வார். மெள ந விரதத்துடன் ஜெபத்திலும் ஈடுபட்டுள்ளார்  என சிலர் தெரிவித்தனர்.


ஜயேந்திரர் மெüனவிரதம்: சங்கராச்சாரியார்கள் ஜயேந்திரர், விஜயேந்திரர் முதல் தளத்திலுள்ள நீதிமன்றத்தின் அலுவலக அறையில் வழக்கம்போல் காத்திருந்தனர். யாருடனும் அவர்கள் காலையில் பேசவில்லை. அனைவரும் விடுதலை என அறிவிக்கப்பட்ட உடன் விஜேயந்திரர் நீதிமன்ற பாதை வழியாக வெளியே சென்றார். ஜயேந்திரர் வழக்கம் போல் நீதிமன்ற அலுவலக பாதை வழியாக வெளியே வந்தார்.

அப்போது அவரிடம் கருத்தை அறிய முயன்ற போது, மிகவும் சோர்வுடன், காணப்பட்டதால் கையை மட்டும் அசைத்தார். அவருடன் வந்தவர்கள் மௌனவிரதம் இருப்பதால் பேச இயலாது என தெரிவித்தனர். அதற்குள் ஏராளமானோர் அவரை சூழத்தொடங்கினர்.

முதல் தளத்தில் இருந்து லிப்ட் வழியாக ஜயேந்திரர் தரைதளத்துக்கு வந்தார். நடக்கவே சிரமப்பட்ட அவர் பக்தர்கள், வழக்குரைஞர்கள் அமைத்த வளையத்தினுள் நடந்தவாறு காரில் ஏறி புறப்பட்டார்.



முக்கிய சாட்சி ரகு

ரவி சுப்பிரமணியன் : காஞ்சிபுரத்திலிருந்து அப்ரூவர் ரவிசுப்பிரமணியன்  14 பேர் கொண்ட காவலற்குழு பாதுகாப்போடு அழைத்து வரப்பட்டிருந்தார்

அப்ரூவர்  ரவிசுப்பிரமணியம்
------------------------------------------------------------------------------------------------------------------------

சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக அவரது மகன் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சங்கரமடத்தின் பீடாதிபதிகள் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், விஜயேந்திரரின் சகோதரர் ரகு, தாதா அப்பு உள்ளிட்ட 23 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு புதுவை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது வந்தது. சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்று வந்த இந்த வழக்கில் புதன்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி முருகன், 23 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இத்தீர்ப்பு குறித்து காஞ்சிபுரத்தில் உள்ள சங்கரராமனின் மகன் ஆனந்த்சர்மா கூறியது: எனது தந்தையின் கொலை வழக்கில் வழங்கப்பட்டத் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வழக்கில் தொடர்புடைய 23 பேரையும் விடுதலை செய்தது மிகவும் வேதனையாக உள்ளது. அப்படி என்றால், எனது தந்தை தானே வெட்டிக் கொண்டு இறந்தாரா? இந்த கொலை வழக்குத் தொடர்பாக விசாரித்த போலீஸார், சங்கர மடத்தில் நடக்கும் தவறு குறித்து எழுதிய கடிதங்களை கைப்பற்றிச் சென்றனர்.

அந்த சாட்சியங்கள் என்ன ஆனது? கடவுள் மேல் நம்பிக்கை உள்ளது. நிச்சயம் ஒருநாள் நல்லத் தீர்ப்பு வரும். மேல்முறையீடு செய்வது குறித்து கலந்து பேசி முடிவு செய்யப்படும் என்றார் ஆனந்த்சர்மா.
 
 தீர்ப்பு  வழங்கியவுடன் புதுச்சேரி நீதிமன்றத்தில்  கற்பூரம் 
ஏற்றி வழிபடும் மடத்தின் ஆதரவாளர்கள் 

கற்பூரம் ஏற்றி வழிபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்ட வழக்குரைஞர்கள் 


புதுவை நீதிமன்றத்தில் சங்கரராமன் கொலை வழக்கின் தீர்ப்புக்கு ஆதரவாக சிலர் தேங்காய் உடைத்து வழிபட்டதாலும், எதிராக சிலர் கண்டன கோஷமிட்டதாலும் புதன்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கின் விசாரணை கடந்த 2005ஆம் ஆண்டிலிருந்து புதுவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு புதன்கிழமை வழங்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்படாததால், குற்றம் சாட்டப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

பகல் 11 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டதும், சங்கராச்சாரியார் சுவாமிகள் தரப்பினர் நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்து காரில் வேகமாக புறப்பட்டுச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற வாயிலில் திரண்ட சங்கர மடத்தின் ஆதரவாளர்கள், நீதி வென்றதென கோஷமிட்டனர். மறுபுறம் வழக்குரைஞர்களில் சிலர், நீதி கிடைக்கவில்லை என கண்டன கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேங்காய் உடைத்து வழிபாடு: நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த தென்னிந்திய புரோகிதர்கள் சங்கச் செயலர் ஆ.செ.நரசிம்ம அய்யர் தலைமையிலான மடத்தின் ஆதரவாளர்கள் சிலர், நீதி தேவதை சிலைக்கு முன் திடீரென சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டனர்.

அவர்கள் கூறும் போது: சங்கராச்சாரியார் சுவாமிகள் மீது வீண் பழி சுமத்தி வழக்கு நடைபெற்றது. இதில் இரு சுவாமிகளுக்கும் நீதி கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பால் சங்கரமட பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாகக் கூறினர். இவர்கள் தேங்காய் உடைத்து வழிபட்டதை, வழக்குரைஞர்கள் சிலர் கண்டித்தனர். இதனையடுத்து அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர்.

கண்டன கோஷம்: நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழக்குரைஞர்கள் ராமன், வேல்முருகன் உள்ளிட்டோர், இந்த வழக்கில் நீதி கிடைக்கவில்லை என கண்டனம் தெரிவித்து கோஷமிட்டனர்.

அவர்கள் கூறியது: சங்கரராமன் கொலை வழக்கில் நீதி கிடைக்கவில்லை. சங்கரராமன் குடும்பத்துக்கு நீதி கிடைக்க தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என ஆவேசமாகக் கூறினர். இதனால் புதுவை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

---------------------------------------------------------------------------------------------------------------
 சங்கராச்சாரியார்கள் விடுதலை: காமாட்சியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

காமாட்சி அம்மன் கோயில் அருகே இனிப்பு வழங்கிக் கொண்டாடும் பக்தர்கள்.

காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து சங்கராச்சாரியார்கள் விடுதலையானதைத் தொடர்ந்து காமாட்சியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சங்கராச்சாரியார்கள் உள்பட 23 பேரையும் புதுவை நீதிமன்றம் புதன்கிழமை விடுதலை செய்தது.

இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சியம்மன் விஸ்வரூப தரிசன டிரஸ்ட் சார்பில் காமாட்சியம்மன் கோயில் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

இதைத் தொடர்ந்து கோயில் குருக்கள் நடராஜ சாஸ்திரிகள் கோயில் முன்பு அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

இதைத் தொடர்ந்து பகல் 12 மணி அளவில் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இது குறித்து நடராஜ சாஸ்திரிகள் செய்தியாளர்களிடம் கூறியது: "சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார்கள் விடுதலை ஆனது மிகவும் சந்தோஷமாக உள்ளது. ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த 2004-ஆம் ஆண்டு தீபாவளியன்று கைது செய்யப்பட்டார்.

கடந்த 8 ஆண்டுகளாக நடந்த வந்த இந்த வழக்கில் புதன்கிழமை நல்லத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இன்றுதான் எங்களுக்கு உண்மையிலேயே தீபாவளி' என்றார்.

                                                                       
நன்றி ;- தினமணி ,  28 - 11 - 2013                                                        

No comments:

Post a Comment