Showing posts with label தமிழ்ச் செய்திகள். Show all posts
Showing posts with label தமிழ்ச் செய்திகள். Show all posts

Tuesday, August 30, 2016

கணவரை சிக்க வைக்க மகள் கடத்தப்பட்டதாக நாடகமாடிய தாய் !



வடமேற்கு தில்லியில் தனது 2 வயது மகளை உறவினர் வீட்டில் தங்க வைத்துவிட்டு, அவர் கடத்தப்பட்டதாக தாய் நாடகமாடிய சம்பவம் அம்பலமாகியுள்ளது.

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஸ்வரூப் நகரைச் சேர்ந்த ஒரு பெண், போலீஸில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு புகார் அளித்தார். அதில், "கருத்துவேறுபாடு காரணமாக எனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வருகிறேன். எனது 2 வயது குழந்தையுடன் மார்க்கெட்டுக்கு சென்றிருந்த போது, அவளை யாரோ கடத்தி சென்றுவிட்டனர். எனது கணவர்தான் கடத்தியிருக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

அதனடிப்படையில் போலீஸார் விசாரணையை தொடங்கினர். சிறுமியின் புகைப்படத்தை தருமாறு அந்த பெண்ணிடம் கேட்டனர். ஆனால், அந்த பெண்ணோ, அவரது குடும்பத்தினரோ சிறுமியின் புகைப்படத்தை தரவில்லை. இது, போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், மார்க்கெட் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவில், அந்த பெண் தனியாக செல்வது போன்றே காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதையடுத்து, புகார் அளித்த பெண்ணிடம் போஸீஸார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த 2 வயது குழந்தையை யாரும் கடத்தவில்லை என்பதும், அப்பெண்ணின் உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. தனது கணவரை போலீஸில் சிக்க வைக்க வேண்டும் என்றே அப்பெண் கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது என்றார் அந்த அதிகாரி.

நன்றி :- தினமணி

Thursday, November 26, 2015

ரூ.22 கோடியுடன் வேன் ஓட்டுநர் மாயம்


தில்லி நகரின் தென்கிழக்குப் பகுதியான கோவிந்தபுரியில் ரூ. 22.5 கோடி மதிப்புள்ள வங்கிப் பணத்துடன் வேன் ஓட்டுநர் ஒருவர் வியாழக்கிழமை தப்பி ஓடியதால், பரபரப்பு ஏற்பட்டது.

 இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது
:
 தில்லியின் விகாஸ்புரி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இருந்த ரூ.38 கோடி மதிப்புள்ள பணத்தை, நான்கு வேன்கள் மூலமாக வேறொரு பகுதிக்கு அந்த வங்கியின் அதிகாரிகள் வியாழக்கிழமை மாலை நேரத்தில் அனுப்பி வைத்தனர்.

 அவற்றில் ஒரு வேனுடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஆயுதம் தாங்கிய பாதுகாவலர் வினய் படேல் என்பவர், கோவிந்தபுரி ரயில் நிலையம் அருகே இயற்கை உபாதைக்காக வண்டியை நிறுத்துமாறு கூறினார். அதையடுத்து, அரை சாலையோரத்தில் இறக்கி விட்ட அந்த வேன் ஓட்டுநர் பிரதீப் சுக்லா என்பவர், அடுத்த தெருவில் காத்திருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், திரும்பி வந்த பாதுகாவலர் வேனையும் ஓட்டுநரையும் காணாமல் அதிர்ச்சியடைந்தார். அந்த வேனில் ரூ. 22.5 கோடி மதிப்புள்ள பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது. வங்கியின் தரப்பில் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

 அதைத் தொடர்ந்து, தில்லி போலீஸார் இரண்டு குழுக்களாகப் பிரிந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். சிறிது நேரத்தில் பாதுகாவலர் வினய் படேலை இறக்கி விட்ட இடத்துக்கு அருகில் அந்த வேனை கண்டுபிடித்தனர். எனினும், ஓட்டுநரையும், வேனில் இருந்த பணப் பெட்டிகளையும் காணவில்லை.
தினமணி

ஆப்கானில் அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல் பாகிஸ்தான் தலீபான் தளபதி பலி மேலும் 12 தீவிரவாதிகள் உயிரிழப்பு



கராச்சி,
ஆப்கானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் பாகிஸ்தான் தலீபான் தளபதி சஜ்னா கொல்லப்பட்டார். அவருடன் மேலும் 12 தீவிரவாதிகள் பலியாகினர்.


தலீபான் தளபதி சஜ்னா

பாகிஸ்தான் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தளபதி கான் சயீத் சஜ்னா. இவர் கடந்த ஆண்டு பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தின் மத்திய தலைவர் முல்லா பஸ்லுல்லாவை நிராகரித்துவிட்டு தான் தனது குழுவுடன் தனியாக இயங்கப்போவதாக அறிவித்தார்.

முல்லா பஸ்லுல்லாவின் தலைமை தனக்குரிய ‘பாதையை’ இழந்து விட்டதாக கூறி சஜ்னா பிரிந்து வந்தார்.


ஆளில்லா விமானத் தாக்குதல்

இந்த நிலையில், நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானில் கோஸ்ட் மாகாணத்தில், தம்மா பகுதியில் உள்ள ஒரு இடத்தில் பல்வேறு குழுக்களாக இயங்கி வந்த தலீபான் அமைப்புகள் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை களைவது தொடர்பாக சமரச பேச்சு வார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு அமெரிக்காவின் ஆளில்லா விமானம் குண்டு வீச்சு நடத்தியது.

கொல்லப்பட்டார் சஜ்னா

இந்த குண்டு வீச்சில் சஜ்னாவும், மேலும் 12 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. 20 தீவிரவாதிகள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

இதுதொடர்பாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.


பாக். உளவு அதிகாரி உறுதி செய்தார்

ஆளில்லா விமான தாக்குதலில் சஜ்னா கொல்லப்பட்டு விட்டதை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவர் உறுதி செய்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்க அதிகாரிகள் இது குறித்து எதுவும் தகவல் வெளியிடவில்லை.

அதே நேரத்தில் சஜ்னா தலைமை தாங்கி வந்த தலீபான் தீவிரவாதிகள் குழு இந்த தகவலை மறுக்கவில்லை.


மிகப்பெரிய அடி

சஜ்னா தொடர்பாக பெஷாவர் ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தின் தளபதியாக திகழ்ந்து வந்த சஜ்னாவை நீண்ட காலமாக பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு படைகள் பின்தொடர்ந்து வந்தன’’ என குறிப்பிட்டார்.

‘‘சஜ்னா, அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டது உண்மை என்றால், அது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாத இயக்கத்துக்கு விழுந்துள்ள மிகப்பெரிய அடியாக அமையும்’’ என பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தின் மற்றொரு தளபதி கூறி உள்ளார்.

2 தினங்களுக்கு முன் ஆப்கானில், குனார் மாகாணத்தில், காஜி மாவட்டத்தில் அமெரிக்கா நடத்திய மற்றொரு ஆளில்லா விமான தாக்குதலில் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தளபதி பிலால் அல் தாயிப் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தினத்தந்தி
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
3
பிரதி
Share

கருத்துக்களை பதிவு செய்ய இங்கே லாக் ஆன் செய்யவும்:
OR
 *
இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.
அதிகபட்ச எழுத்துக்கள் -1500
முக்கிய குறிப்பு: தினத்தந்தி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு தினத்தந்தி நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு webeditor@dt.co.in என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

அதிக கருத்துக்கள் பதிவு செய்தவர்கள்
img
Bronze 2513crone
1
img
Bronze 1479crone
2
img
Bronze 439 crone
3
img
Bronze 378 crone
4
img
Bronze 295 crone
5

ரஷ்ய ஹெலிகாப்டர் வெடித்து 15 பேர் பலி


ருஷ்யாவில் பயணிகள் ஹெலிகாப்டர் ஒன்று வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த 15 பேர் பலியாயினர்.

இதுதொடர்பாக அந்நாட்டு மண்டல போக்குவரத்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தலைநகர் மாஸ்கோவிலிருந்து 2,800 கி.மீ. தொலைவில் உள்ள மேற்கு சைபீரியாவின் இகர்கா விமான நிலையத்திலிருந்து எம்ஐ-8 ரக ஹெலிகாப்டர் காலை 9.30 மணிக்கு புறப்பட்டது. 22 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் அப்பகுதியில் உள்ள எண்ணெய் பம்பிங் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த அந்த ஹெலிகாப்டர், புறப்பட்ட 15 நிமிடங்களில் வெடித்துச் சிதறியது. 

இந்த விபத்தில் 15 பேர் பலியாயினர். மேலும் படுகாயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



நன்றி :- தி இந்து

Wednesday, November 25, 2015

ரஜினியுடன் பணியாற்றிய நாட்கள்: உருகும் மெய்க்காப்பாளர்

ரஜினியுடன் ராஜ் அபுக்கா ஜோ

ரஜினியுடன் ராஜ் அபுக்கா ஜோ


ரஜினியுடன் மெய்க்காப்பாளர்கள்.

ரஜினியுடன் மெய்க்காப்பாளர்கள்.

மலேசியாவில் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் ரஜினி. இன்னும் ஒரு கட்டப் படப்பிடிப்பு அங்கே நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘கபாலி’ படப்பிடிப்பின்போது மலேசியாவில் ரஜினிக்கு மெய்க்காப்பாளராக பணியாற்றிய ராஜ் அபுக்கா ஜோவை தொடர்புகொண்டு பேசினோம். ரஜினியுடன் பணியாற்றிய நாட்கள் குறித்து ராஜ் அபுக்கா ஜோ ‘தி இந்து’விடம் கூறியதாவது:

“நான், மைக், சாம்மாட், சாரி உள்ளிட்டவர்கள்தான் ரஜினிக்கு மெய்க் காப்பாளர்களாக பணியாற்றினோம். கமல், சூர்யா உள்ளிட்ட தமிழ் நட்சத்திரங்கள் மலேசியாவுக்கு படப்பிடிப்புக்கு வரும் போது நான் மெய்க்காப்பாளராக பணியாற்றி இருக்கிறேன். ரஜினி சாரின் தீவிர ரசிகன் நான். அவருடைய சிலை ஒன்றை என் வீட்டில் வைத்திருக்கிறேன்.

அப்படிப்பட்ட எனக்கு ரஜினியுடன் பணியாற்றும் அனுபவம் கிடைக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. அவருடைய வேகத்தை நான் வேறு எந்த நடிகரிடமும் பார்க்கவில்லை. ரஜினி வெளியே கிளம்பிவிட்டால், அவருக்கு ஈடுகொடுத்து செல்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

ஒருமுறை அவர் அறையில் இருக்கும்போது, நாங்கள் வெளியில் நின்று கொண்டிருந்தோம். அப்போது அறையில் இருந்து வெளியே வந்த அவர், “வீட்டுக்கு செல்லவில்லையா?” என்றார். “இல்லை சார்.. உங்கள் பாதுகாப்புக்காக இருக்கிறோம்” என்றோம்.

உடனடியாக அவர் தனது அறைக்குச் சென்று தன் உதவியாளர் சுப்பையாவிடம் “நான் உள்ளே நிம்மதியாக தூங்குவேன். ஆனால் அவர்களோ வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள். கஷ்டமாக இருக்கிறது. அவர்களை வீட்டுக்கு போகச் சொல்லுங்கள். போன் நம்பர் வாங்கிக் கொள்ளுங்கள். உதவி தேவைப்படும் போது நாம் அவர்களை அழைக்கலாம்” என்று கூறியிருக்கிறார். இது அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது.

இந்திய திரையுலகம் கொண்டாடும் ஒரு நடிகர், மலேசியாவில் மிகவும் எளிமையாக இருந்தார். காரில் சென்று கொண்டிருப்பார். சிக்னலில் யாராவது கையை காட்டினால் உடனே கண்ணாடியை இறக்கிவிட்டு அவர்களுடன் பேசுவார், கை குலுக்குவார். சில சமயங்களில் நாங்கள் சென்று அவருக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டு விடக் கூடாதே என்று தடுப்பதற்குள் அவருடைய கைகளில் அடிபட்டுவிடும். அதைக் கூட அவர் பெரிதுபடுத்தவில்லை. அடுத்த நாளும் அப்படியே செய்வார். தனது ரசிகர்கள் மீது அவர் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார்.

எங்களை எல்லாம் மெய்க்காப்பாளர்கள் என்றே அவர் நினைக்கவில்லை. நண்பர்கள் போன்று நடத்தினார். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் சாப்பிட்டீர்களா என்று விசாரிப்பார். பத்திரமாக வீட்டுக்கு போக வேண்டும் என்று சொல்வார். நான் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டிருக்கிறேன். ஒரு நாள் என்னை அழைத்து ஆசிர்வாதம் செய்து மாலை ஒன்றை போட்டுவிட்டார். எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. அவருட னான 19 நாட்களும் என் வாழ்க்கையின் பொன்னான தருணங்கள்.

ஒருநாள் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில், தங்கியிருந்த ஓட்டலுக்கு கீழே கைலியுடன் வந்துவிட்டார். நாங்கள் அவரைத் தடுத்தபோது, “எனக்காக என் ரசிகர்கள் மழை, வெயில் என பார்க்காமல் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நிற்பதை விட, நான் கீழே இறங்கி வந்தது ஒன்றும் பெரிய விஷயமில்லை” என்றார்.

தமிழ்நாட்டை அடுத்து மலேசியாவில் தான் அவருக்கு ரசிகர்கள் அதிகம். ரஜினிக் காக தமிழ் கற்றுக் கொண்டவர்கள் இங்கு அதிகம். இங்கு அவர் இருக்கும்போது வெவ் வேறு இடங்களில் இருந்து ரசிகர்கள் அவரை பார்க்க வந்து நின்றது மறக்க முடியாதது. அவர் மீண்டும் மலேசியாவுக்கு வருவார் என்று நம்புகிறேன். அவரிடம் மீண் டும் பணியாற்ற இருக்கும் நாட்களுக்காக காத்திருக்கிறேன்.

இவ்வாறு ராஜ் அபுக்கா ஜோ கூறினார்.

மேலும் சினிமா தகவல்களுக்கு...
Keywords: ரஜினி, பணியாற்றிய நாட்கள், உருகும் மெய்க்காப்பாளர், கபாலி, தமிழ்நாடு, ரசிகர்

நன்றி :- தி இந்து :- 

நாமக்கல்லில் பள்ளி வளாகத்தில் மது அருந்தியதாக 4 மாணவிகள் நீக்கம்


Image result for teenage girls drinking alcohol in class rooms clip arts in india

நாமக்கல் அரசுப் பள்ளியில் வளாகத்திலேயே மது அருந்தியதாக 4 மாணவிகள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் 4 மாணவிகள் தேர்வு அறையில் மது அருந்திய நிலையில் இருந்ததால் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர். அந்த மாணவிகளுடன் இருந்த மேலும் 3 மாணவிகள் இது குறித்து ஆசிரியர்களிடம் தெரிவிக்காமல் மறைத்ததால் நீக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கடந்த 21-ம் தேதி நடந்துள்ளது.

திருச்செங்கோடு அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில் மொத்தம் 2,500 மாணவிகள் பயில்கின்றனர்.

பள்ளியில் கடந்த 16-ம் தேதி தேர்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கனமழை காரணமாக அன்று தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. மறுதேர்வு நவம்பர் 21-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 21-ம் தேதி கணினி அறிவியல், அறிவியல், வணிக கணிதம் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடைபெறும் என்றும் மாணவிகள் தேர்வு எழுத வருமாறும் பள்ளி அறிவுறுத்தியிருந்தது.

காலை 8.30 மணிக்கு மாணவிகள் பள்ளிக்கு வரத் துவங்கினர். அப்போது ஆசிரியர்கள் யாரும் வரவில்லை. பிளஸ் 1 மாணவிகள் சிலர் தாங்கள் கொண்டுவந்திருந்த மது பாட்டிலைத் திறந்து அதில் குளிர்பானத்தை கலந்து அருந்தியுள்ளனர். சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மாணவிகள் தேர்வு அறைக்குச் சென்றுள்ளனர். தேர்வு அறையில் இருந்த கண்காணிப்பாளர் மாணவிகள் நிலையைக் கண்டு அதிர்ந்துபோய் தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணியிடம் தெரிவித்தார். உடனடியாக பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து பள்ளி வளாகத்தில் மது அருந்தியதாக 4 மாணவிகளும், அதற்கு துணை போனதாக 3 மாணவிகளும் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர். கடந்த சனிக்கிழமை 4 மாணவிகளுக்கும் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மற்ற மூன்று மாணவிகளின் பெற்றோர்கள் இன்னும் தங்கள் பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழை வாங்கவில்லை.

இது தொடர்பாக பள்ளியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சி.இ.ஓ எஸ்.கோபிதாஸ் விசாரணை மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியைகளிடம் விசாரணை மேற்கொண்டார்.

இன்று பள்ளியில் சி.இ.ஓ. விரிவான விசாரணை மேற்கொள்கிறார். ஆசிரியைகள், மற்ற மாணவிகள், நீக்கப்பட்ட 7 மாணவிகளிடமும் விசாரணை செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மூன்றாவது சம்பவம்:

கடந்த ஆண்டு திருச்செங்கோடு அரசு ஆண்கள் பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் 4 பேர் பள்ளி விழாவில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டதாக நீக்கப்பட்டனர். கடந்த ஜூலையில் மாணிக்கம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்ற பிளஸ் 1 மாணவர்கள் 4 பேர் நீக்கப்பட்டனர்.

Keywords: பள்ளி வளாகம், மது அருந்தியது, 4 மாணவிகள் நீக்கம்
Topics: தமிழகம்|

தி   இந்து

7 முறை தேர்தலில் வெற்றி பெற்றவர்: காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பொன்னம்மாள் காலமானார்

பொன்னம்மாள்


காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஏ.எஸ்.பொன் னம்மாள் மதுரை மருத்துவ மனையில் நேற்று காலமானார். இவர், 7 முறை தேர்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் மூத்த உறுப்பினராக பதவி வகித்தவர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அழகன் பட்டியைச் சேர்ந்தவர் ஏ.எஸ்.பொன்னம்மாள் (88). இவர் 1957-ம் ஆண்டு முதல்முறையாக காங்கிரஸ் சார்பில் நிலக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், 1962-ல் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 1967, 1971-ம் ஆண்டுகளில் நிலக்கோட்டையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு திமுகவிடம் தோல்வியடைந்தார். 1980-ல் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்று பழ.நெடுமாறன் தலைமையிலான காந்தி காமராஜ் கட்சி சார்பில் நிலக்கோட்டையில் ‘மீன்’ சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.

1984-ல் மீண்டும் காங்கிரஸில் சேர்ந்து பழநியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1989, 1991-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் சார்பிலும், 1996-ல் தமாகா சார்பிலும் நிலக்கோட்டையில் வெற்றி பெற்றார். நிலக்கோட்டை தொகுதியில் 5 முறையும், பழநி, சோழவந்தான் தொகுதிகளில் தலா ஒரு முறையும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 1996-ல் மூத்த உறுப்பினர் என்ற முறையில் சட்டப்பேரவையின் தற்காலிக பேரவைத் தலைவராக இருந்து புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பொன்னம்மாள் கடந்த 3 வாரங்க ளாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பொன்னம்மாள், நேற்று மாலை இறந்தார். சொந்த ஊரான அழகன்பட்டியில் பொதுமக்கள், கட்சிப் பிரமுகர்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் இன்று நடக்கின்றன. இவரது ஒரே மகள் வசந்தி மீனா ஏற்கெனவே இறந்துவிட்டார்.

Keywords: 7 முறை, தேர்தலில் வெற்றி பெற்றவர், காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ பொன்னம்மாள், பொன்னம்மாள் காலமானார். 

தி இந்து

Tuesday, November 24, 2015

யூடியூப் பகிர்வு: பிள்ளைகளிடம் பகிர வேண்டிய 'பகிரங்கங்கள்'! - காணொலி !

விடலைப் பையன்கள் செய்கின்ற பல காரியங்கள் விளையாட்டுத்தனமாகவே பார்க்கப்படுகின்றன. 'சின்னப் பசங்க அப்படித்தான் இருப்பாங்க.. போகப்போக சரியாயிடும்!'என்பதுதான் அவர்களைப் பற்றி உறவுகள், நண்பர்கள், குடும்பங்களுக்கிடையே சொல்லப்படுகிற கருத்தாக இருக்கிறது.

கண நேர மகிழ்ச்சிக்காகவும், தற்பெருமைக்காகவும் ஒரு பெண்ணைக் கிண்டலடிப்பதில் தொடங்குவது, மெல்ல மெல்ல அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. இதனால் இளைஞர்களுக்கும், ஆண்களுக்கும் தாங்கள் என்ன செய்கிறோம்? அதனால் என்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பதே தெரிவதில்லை. பொதுவாகவே வீடுகளில், பாலியல் துன்புறுத்தல் குறித்த பேச்சுகள் அரிதாகத்தான் நிகழ்கின்றன. இந்தச் சுவரைத் தகர்க்க ஒரு முயற்சியை எடுத்திருக்கிறது பிரேக்த்ரூ எனும் மனித உரிமைகள் அமைப்பு.

தனக்கு நேரும் அனுபவங்கள் குறித்து, ஒவ்வொரு தாயும் தனது மகனிடம் சொல்ல வேண்டும் என்கிறது பிரேக்த்ரூ. ஒவ்வொரு பெண்ணும் தன் வீட்டில் சொல்லத் தயங்கும் ஓர் உண்மைச் சம்பவக் காணொலி இதோ.

திருப்புமுனை என்ற பொருள் கொண்ட பிரேக்த்ரூ அமைப்பு, பெண்களும் சிறுமிகளும் சந்திக்கின்ற வன்முறைகளுக்கெதிராக தொடர்ந்து இயங்கி வருகிறது. ஒரு பெண், தன்னுடைய தினசரி வாழ்க்கையில் வெவ்வேறு வடிவங்களில் பாலியல் துன்புறுத்தல்களைச் சந்தித்துக் கொண்டேதான் இருக்கிறாள். சுமார் 90 சதவீத பெண்கள் முக்கியமாகப் பொது இடங்களில் இந்தத் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்கிறது இதன் ஆய்வு.


நன்றி :- தி இந்து