Tuesday, November 24, 2015

வர்த்தகர் காங்கிரஸின் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து வசந்தகுமார் நீக்கம் !


வர்த்தகர் காங்கிரஸின் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து எச்.வசந்தகுமார் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்துள்ளார்.

 இதுதொடர்பாக இளங்கோவன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:- காங்கிரஸின் மாநிலத் துணைத் தலைவரான எச்.வசந்தகுமார், வர்த்தகர் பிரிவின் மாநிலத் தலைவராகவும் இருந்து வருகிறார்.

 இதனால், வர்த்தகர் காங்கிரஸ் பிரிவின் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து வசந்தகுமார் நீக்கப்பட்டு, புதிய தலைவராக எம்.எஸ்.திரவியம் நியமிக்கப்படுகிறார். இருப்பினும், கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக வசந்தகுமார் நீடிப்பார் என்றார்.

 கட்சியில் பரபரப்பு: தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அண்மையில் சந்தித்த மூத்தத் தலைவர்கள் ப.சிதம்பரம், குமரி அனந்தன், கே.வீ.தங்கபாலு, எச்.வசந்தகுமார் உள்ளிட்டோர், தன்னிச்சையான முடிவுகளை இளங்கோவன் எடுப்பதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில், எச். வசந்தகுமாரிடமிருந்து பதவி பறிக்கப்பட்டுள்ளது என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி

No comments:

Post a Comment